வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் நடந்த சாலை விபத்தில் பெண் பரிதாப பலி!வேலூர், ஏப். 28-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கனரக வாகனம் மின் கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் உயர் மின் அழுத்த கம்பம் சாய்ந்து தரையில் விழுந்தது. இதனால் அருகில் இருந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழக ஆந்திர இரு மாநில இணைப்பு போக்குவரத்து இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மின்துறை களப் பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை சரி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply