காட்பாடியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!வேலூர்,ஏப்.28-பெங்களூரைச் சேர்ந்தவர் மதுவாணன் (50) .இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்னை ரயிலில் பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு பெண் பயணியிடம் மதிவாணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காட்பாடி ரயில்வே போலீஸார் காவல் ஆய்வாளர் மனோன்மணி தலைமையில் விரைந்து சென்று ஓடும் ரயிலில் மதிவாணனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர் .வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவின் பேரில் மதிவாணன் வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆதலால் முன்பதிவு செய்துள்ள ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரோ அல்லது ரயில்வே போலீஸாரோ பாதுகாப்பு பணிக்கு நியமிக்க வேண்டுமென பெண் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.