வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு!வேலூர்,ஜூன்18-வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பி எஸ் பி சங்கர் தலைமையில், ஆய்வாளர் மைதிலி உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 4ம் தேதி வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய முகாந்திரம் இல்லாமல் வைத்திருந்த ரூபாய் 75 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சார் பதிவாளர் பத்மபிரியா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தேவையற்ற நபர்கள் (புரோக்கர்கள்) நடமாட்டமும் அதிகம் இருப்பதை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதற்குப் பிறகு இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் பத்மபிரியா கைது செய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காட்பாடி வட்டத்தில் ஜமாபந்திதொடக்கம்: பொதுமக்கள் குவிந்தனர்!வேலூர், ஜூன் 18-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி 17ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா, மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.