அணைக்கட்டு தொகுதி சோழவரத்தில் திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 10-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆசி பெற்ற, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், சோழவரம் கிராமத்தில் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், சோழவரம் ஜேபி (எ) ஜெயப்பிரகாஷ், திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா குடியாத்தம் நகரில் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 8-குடியாத்தம் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.பரிதாபுருஷோத்தமன் செவ்வாய்கிழமை (07-04-2026)காலை 8.30 ஆரம்பித்து ஜெ.ஜெ.,நகர், எம்.ஜி.ஆர்.நகர் , கலைஞர் நகர் , புதிய லைன், தரைக்காடு, சிவராஜ் நகர், அத்திப்பட்டி, டெலிபோன் ஆபீஸ் தெரு, பஜார் வீதி, சின்ன பஜார் வீதி, மாவு மிஷன் தெரு ஆகிய இடங்களில் தெருத் தெருவாக மக்களோடு மக்களாய் சென்று வாக்குகள் சேகரித்தார். பரிதா வாக்காளர்களிடம் பேசுகையில், இந்த குடியாத்தம் தொகுதிதான் எனக்கு கோயில். வாக்காளர்களாகிய நீங்கள்தான் எனக்கு தெய்வங்கள் என்று கூறி வாக்காளர்களின் மனங்களை தட்டி எழுப்பி அவர்களை கவர்ந்து தங்களது வாக்குகளை அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பரிதா கேட்டுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.