
வேலூர் 45 வது வார்டில் கவுன்சிலர் அஸ்மிதா அன்னதானம் வழங்கல்!வேலூர், ஜூன் 4-வேலூர் ஆரணி ரோட்டில் 45 வது வார்டு திமுக கவுன்சிலர் அஸ்மிதா கோபிநாதன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் மற்றும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கவுன்சிலர் அஸ்மிதா கோபிநாதன் அன்னதானம் வழங்கினார். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அன்னதானம் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இந்த எளிய விழாவில்பைனான்சியர் லட்சி என்கின்ற லட்சுமணன், கோபிநாதன், கிரண் குமார், கணேஷ், கட்சி நிர்வாகி கணபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply