ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தல்: காட்பாடி அருகே டிப்பர் லாரி பறிமுதல்!வேலூர், ஜூன் 3-ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்பாடி எல்லைப் பகுதியில் கனிம வளத்துறையின் தனி வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் மற்றும் எவ்வித அனுமதியுமின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த தனி வருவாய் அலுவலர் மேல் நடவடிக்கைக்காக காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.