காஞ்சிபுரம் அ.தி.மு.க., மு.மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நீலாவதி தலைமையில் 100 பேர் அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம்!காஞ்சிபுரம், ஜூன் 3 -காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெ.நீலாவதி தலைமையில் மகளிர் உட்பட 100 பேர் அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர். இந்த புதியவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து அடையாள அட்டைகளை வழங்கி வரவேற்றார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நீலாவதி ( 52 ). அ.தி.மு.க.,வில் 30 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட இவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான வி.சோமசுந்தரம், வளர்மதி அகியோரின் ஆலோசனைப்படி கட்சிப் பணிகளை சிறப்பாக ஆற்றி வந்தவர். இவரது தலைமையில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கீதா, பகுதி மகளிர் அணி பொறுப்பாளர்களான மாதவி, லட்சுமி ஆகியோரும்.என்.ஜி.சித்தையன், சையத் அலி, எஸ்.சத்யா, ஜெயசூரியா, ரஞ்சனி பிரியா, லலிதா, பொற்கொடி, கலாவதி, சாருமதி ஆகியோரும்மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த வத்சலா, முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரான குமரேசன், அய்யனார் உள்ளிட்ட 100 பேர் காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களுக்கு த.வெ.க.,வின் அடையாள அட்டைகளும் உடனடியாக வழங்கப்பட்டது. த.வெ.க.,வில் இணைந்த முன்னாள் ஊராட்சி குழு தலைவர் ஜெ.நீலாவதி உள்ளிட்ட அனைவருக்கும் அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்உடனிருந்தனர்.