
வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்து தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம்!வேலூர் மே 31-தவெக சார்பில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் புறக்கணிப்பு செய்து தரையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அங்கு இருந்த சில விவசாயிகள் தரையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த விவசாயிகளை சக விவசாயிகளே தூக்கி எழுப்பி தண்ணீர் கொடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டம் நடந்த போது விவசாயிகளை மாவட்ட நிர்வாகமும், மற்ற அரசு அலுவலர்களும் யாரும் ஒரு பெரிய பொருட்டாகவே கருதவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் போராட்டம் நடத்திய விவசாயிகளை யாரும் மனிதர்களாகவே மதிக்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய வேதனைக்குரியதாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply