
திமிரி அருகே வருவாய்த்துறை நிலத்தில் அனுமதியின்றி பாறை தகர்ப்பு வெடி – அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்!ராணிப்பேட்டை, மே 29-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட துர்கம் கிராமத்தில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நெல்லிமலை காட்டுப் பகுதியில் எந்த அனுமதியும் இல்லாமல் சமூக விரோதிகள் பாறையை வெடி வைத்து தகர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை கொண்டு அதிக அளவில் வெடி துளைகள் போடப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.”அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” .இந்நிலையில், பத்துரூபாய் இயக்கத்தின் திமிரி ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவை கைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், “நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.மேலும், “அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமிரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி பத்துரூபாய் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” எனவும் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.










Leave a Reply