வாடிக்கையாளர்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஏமாற்றிய தபால் நிலைய கிளை போஸ்ட் மாஸ்டர் அதிரடி கைது!வேலூர், மே 29-காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள தபால் நிலைய கிளையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்த சுடர் நிதி என்பவர் வாடிக்கையாளர்களின் பணம் ரூ. 9,32,309/- கையாடல் செய்து ஏமாற்றியதாக காசிநாதன் (தபால் நிலைய உதவியாளர்) என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் 26.05.2026 அன்று வேலூர் மாவட்ட குற்றப் பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவை போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோகிலா வழக்குப் பதிவு செய்து லத்தேரி பகுதியைச் சேர்ந்த சுடர் நிதி க/பெ.சக்திவேல் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுடர் நிதியை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் சுடர் நிதி வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய பெண்கள் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.