
தமிழக அரசு இன்னமும் 6 மாதத்தில் கலைந்து விடும்: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் ஆருடம்!வேலூர், மே 29-தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில தலைவர் பாபு தலைமையில் நிர்வாகிகள்அனைவரும் கடந்த 26.05.2026 அன்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அப்பொழுது தற்போதைய பதிவுத்துறை தலைவரும், தலைமை தணிக்கை இயக்குநருமான அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் குறித்து புகார் மனு ஒன்றை அமைச்சரிடம் அளித்தனர். அதில் கடந்த 18.05.2026 அன்று நிதி அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் குறித்து புகார்கள் தெரிவித்தனர். அதனால் ஆத்திரமடைந்த அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் தமிழக அரசை சிறுமைப்படுத்தும் நோக்கில் இந்த ஆட்சி இன்னும் 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரை யார் யாரெல்லாம் சந்தித்து புகார் மனு அளித்தார்களோ அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவால் விட்டு பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இம்மனுவில் தணிக்கை துறையில் cams மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்படும் தணிக்கையில் விடுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. 200 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவில் உள்ள தூரங்களில் பணி அமர்த்துவது, பணியமர்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் பெண் பணியாளர்களை ஒருமையில் திட்டுவது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சருக்கு தெரியாமல் தணிக்கை துறையை தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், உண்மை நிலவரங்களை மறைத்து மறு சீரமைப்பு பணிகள் முடியவில்லை என்ற போலி காரணத்தை காட்டி திரை மறைவு வேலைகள் மூலம் மீண்டும் தலைமை தணிக்கை இயக்குநர் கூடுதல் பொறுப்பை தொடர்வதற்கான ஆணையை அவர் தந்திரமாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவருக்கு எதிராக தலைமைச் செயலக நிதித்துறை பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியது, கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தியது போன்ற விவரங்களையும், தொடர்ந்து பணியாளர்கள் விரோதப் போக்கை கடைபிடிப்பது மற்றும் தற்போதைய தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக குறிப்பிட்டு தற்போது தலைமை தணிக்கை இயக்குநராக உள்ள அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ்ஸை தலைமை தணிக்கை துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தலைமை தணிக்கை இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் இவர் மீது என்ன துறைஸ்வ வாரிய்ய நடவடிக்கையை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்










Leave a Reply