வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்!வேலூர், ஏப்.21-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தட்டப்பாறை பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தீவனப் பயிர்களுக்கு நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 275 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஹரிதாஸ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.