Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ. பி. நந்தகுமார் கே. வி. குப்பம் சட்டமன்ற தொகுதி லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
ஜனநாயக கடமை நிறைவேற்றிய போது
ஜனநாயக கடமையை நிறைவேற்ற கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ள சி ஐ டி யு சாலையோர சிறு வியாபாரிகள்
ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் மேட்டுப்பாளையம் தொகுதி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம்
கோவை: எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக பொதுக்கழிவறை அமைக்காமல் இயங்கும் பேருந்து நிலையம்!வேலூர், ஏப். 23-வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. இந்த பகுதியில் காட்பாடியில் இருந்து குடியாத்தம், சென்னை, திருத்தணி, விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை ,திருப்பதி, சித்தூர், கர்னூல் ,கடப்பா, புத்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த சித்தூர் பேருந்து நிலையத்தில் விஐடி பல்கலைக்கழகம் இயக்கும் தனியார் கழிப்பறையே பல ஆண்டுகளாக பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கழிவறையும் இரவு 7:30 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தவியாய் தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக பெண் பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு பிரசவ வலி போன்று அவதிப்பட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதே நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி நிர்வாகமானது பொதுக்கழிப்பறையை கட்டித் தராமல் கடைகளை மட்டும் கட்டி வாடகை விட்டு வசூல் செய்து கொள்கிறது. மக்கள் நலனில் அக்கரையில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புகார் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செவிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு பேருந்து நிலையம் என்றால் அடிப்படை தேவை முதலில் கழிப்பறை இருக்க வேண்டும். இந்த கழிப்பறையே இல்லாத நிலைக்கு சித்தூர் பேருந்து நிலையம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். அதே போன்று பயணிகளின் தாகம் தீர பொதுவாக ஒரு குடிநீர் தொட்டியும் இங்கே ஏற்படுத்தித் தரவில்லை மாநகராட்சி நிர்வாகம். இது போன்ற குறைகளை இதுநாள் வரையில் களையாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதை வேலூர் மாவட்டத்தில் இது நாள் வரை பதவி வகித்து வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதையே இந்த செயல் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுநாள் வரை அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது ஏனோ என தெரியவில்லை. வாய்க்கால்களை கட்டுவதிலும், சாலை அமைப்பதிலும், சிறு பாலம் கட்டுவதிலும் குறியாக இருக்கின்றார்களே தவிர அடிப்படை தேவையான கழிவறையை பற்றி யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிய வருகிறது. ஆதலால் இம்முறையாவது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சித்தூர் பேருந்து நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுக்கழிவறை ஒன்றை அமைத்து தந்து பயணிகள் இயற்கை உபாதைகளை சிரமம் இன்றி கழிப்பதற்கு பேருதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செவிமெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தருவாரா? என்பது காட்பாடி தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை வெற்றி பெறும் வேட்பாளர் செய்து தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக பொதுக்கழிவறை அமைக்காமல் இயங்கும் பேருந்து நிலையம்!வேலூர், ஏப். 23-வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. இந்த பகுதியில் காட்பாடியில் இருந்து குடியாத்தம், சென்னை, திருத்தணி, விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை ,திருப்பதி, சித்தூர், கர்னூல் ,கடப்பா, புத்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த சித்தூர் பேருந்து நிலையத்தில் விஐடி பல்கலைக்கழகம் இயக்கும் தனியார் கழிப்பறையே பல ஆண்டுகளாக பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கழிவறையும் இரவு 7:30 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தவியாய் தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக பெண் பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு பிரசவ வலி போன்று அவதிப்பட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதே நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி நிர்வாகமானது பொதுக்கழிப்பறையை கட்டித் தராமல் கடைகளை மட்டும் கட்டி வாடகை விட்டு வசூல் செய்து கொள்கிறது. மக்கள் நலனில் அக்கரையில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புகார் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செவிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு பேருந்து நிலையம் என்றால் அடிப்படை தேவை முதலில் கழிப்பறை இருக்க வேண்டும். இந்த கழிப்பறையே இல்லாத நிலைக்கு சித்தூர் பேருந்து நிலையம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். அதே போன்று பயணிகளின் தாகம் தீர பொதுவாக ஒரு குடிநீர் தொட்டியும் இங்கே ஏற்படுத்தித் தரவில்லை மாநகராட்சி நிர்வாகம். இது போன்ற குறைகளை இதுநாள் வரையில் களையாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதை வேலூர் மாவட்டத்தில் இது நாள் வரை பதவி வகித்து வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதையே இந்த செயல் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுநாள் வரை அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது ஏனோ என தெரியவில்லை. வாய்க்கால்களை கட்டுவதிலும், சாலை அமைப்பதிலும், சிறு பாலம் கட்டுவதிலும் குறியாக இருக்கின்றார்களே தவிர அடிப்படை தேவையான கழிவறையை பற்றி யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிய வருகிறது. ஆதலால் இம்முறையாவது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சித்தூர் பேருந்து நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுக்கழிவறை ஒன்றை அமைத்து தந்து பயணிகள் இயற்கை உபாதைகளை சிரமம் இன்றி கழிப்பதற்கு பேருதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செவிமெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தருவாரா? என்பது காட்பாடி தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை வெற்றி பெறும் வேட்பாளர் செய்து தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்பாடி தொகுதியில் வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி!வேலூர்,ஏப்.23-தமிழகத்தில் இன்று (23ஆம் தேதி) சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம், காட்பாடி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. சுத்தம் செய்த பணிகள் நிறைவு பெற்றதும் கொசுக்களை ஒழிப்பதற்கு புகை அடிக்கப்பட்டது. வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சிரமமின்றி பணியாற்ற வாக்குப்பதிவு அறை சத்தம் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சந்திப்பு: தேர்தல் தொடர்பான விரிவான விளக்கம் அளிப்பு!வேலூர், ஏப்.23-தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதி சோதனை சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் பணிக்கு வரும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை தேவைகளான தங்கும் வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவர் குழுவும், தீயணைப்புத்துறை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
1
…
9
10
11
…
87
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.