வாலாஜா வன்னிவேடு புத்த விஹாரில் புத்த பூர்ணிமா விழா: குடியாத்தம் தலித்குமார் பங்கேற்பு!வேலூர், மே 3-பன்னாட்டு பௌத்த இளைஞர் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் வாலாஜா வன்னிவேடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புத்த விஹாரில் புத்த பூர்ணிமா (ஜெயந்தி) விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் பொன். புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.குசேலன் வரவேற்றார். அதன் பிறகு புத்த பூஜை மற்றும் தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர். கவிஞர். யாழன்ஆதி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர் பி. லோகநாதன், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய குடியரசு கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாவட்ட தலைவர் எஸ். தயாளன், பி. ஏகாம்பரம், வேலூர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கே.சுசீந்திரன், பௌத்த சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா.சி.தலித் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், உபாசகர்கள், பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சங்க பொருளாளர் எஸ்.கருணாகரன் நன்றி கூறினார்.

காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கல்!வேலூர், மே 3-கடும் கோடை வெயிலை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கி பொதுமக்களை குளிர வைத்தனர்.வேலூரில் கடும் வெயிலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கமும், காந்திநகர் புத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகளும் இணைந்து 2வது நாளான இன்றும் கத்திரி வெயில் முடிவடையும் நாளான மே 28ஆம் தேதி வரை தினமும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது.காட்பாடி காந்திநகர், தனபாக்கியம் திருமண மண்டப பேருந்து நிறுத்தம் புத்து கோயில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைத்தார்.மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகைசெல்வம், அமுதா, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் முனைவர். ஆர். சீனிவாசன், காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவக் குழு தலைவர் டாக்டர். வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் நாராயணா தங்கவேல் நாடார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.ஸ்ரீதரன் ஜெயின், ஆனந்தகுமார், ஆர். சுதாகர், எஸ்.தன்வின், எஸ்.தைவிக், செ.ஜ.சோமசுந்தரம்,எம்.டீக்காராமன், எஸ்.பன்னீர்செல்வம், மனோகர், லக்ஷ்மணன், குமரவேல், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட இந்த சாலையை கடந்து சென்ற அனைவருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்து இடைவிடாது நீர் மோர் வழங்கினர்.

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்கும் பணியை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர், மே 3 -வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, வார்டு 9 -காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளை உரமாக்கும் பணியை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் செல்லும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வாங்குகின்றனரா? என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து குப்பைகளையும் ஒரே கலவையாக வழங்கிய இல்லத்தரசிகளுக்கு சில அறிவுரைகளை சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து இல்லந்தோறும் வாங்க வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கும் சில அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கல்!வேலூர், மே 3-கடும் கோடை வெயிலை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கி பொதுமக்களை குளிர வைத்தனர்.வேலூரில் கடும் வெயிலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கமும், காந்திநகர் புத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகளும் இணைந்து 2வது நாளான இன்றும் கத்திரி வெயில் முடிவடையும் நாளான மே 28ஆம் தேதி வரை தினமும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது.காட்பாடி காந்திநகர், தனபாக்கியம் திருமண மண்டப பேருந்து நிறுத்தம் புத்து கோயில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைத்தார்.மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகைசெல்வம், அமுதா, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் முனைவர். ஆர். சீனிவாசன், காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவக் குழு தலைவர் டாக்டர். வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் நாராயணா தங்கவேல் நாடார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.ஸ்ரீதரன் ஜெயின், ஆனந்தகுமார், ஆர். சுதாகர், எஸ்.தன்வின், எஸ்.தைவிக், செ.ஜ.சோமசுந்தரம்,எம்.டீக்காராமன், எஸ்.பன்னீர்செல்வம், மனோகர், லக்ஷ்மணன், குமரவேல், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட இந்த சாலையை கடந்து சென்ற அனைவருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்து இடைவிடாது நீர் மோர் வழங்கினர்.

காட்பாடியில் மது போதையில் உணவகத்தை அடித்து நொறுக்கிய நேபாளத் தொழிலாளர்கள்: கைது செய்யாமல் தப்பி ஓடிய போலீஸார்!வேலூர், மே 3-வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகத்தை, அங்கேயே பணிபுரியும் நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் முரளி என்பவருக்குச் சொந்தமான ‘MRM பாஸ்புட் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேபாள நாட்டைச் சேர்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூன்று பேர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.நேற்று முன்தினம் (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மது அருந்திவிட்டு போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளர்களும்அங்கிருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் கடையில் இருந்த சுமார் ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் முழுமையாகச் சேதமடைந்தன. கடையில் பொருட்களை அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து காட்பாடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மெத்தனமாகச் செயல்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வெளிநாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்து, தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த கடையையே அடித்து நொறுக்கிய செயல் கண்டிக்கத்தக்கது. அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதற்காகத் தப்பிக்க விடக்கூடாது. உரிய விசாரணை நடத்தி, சேதத்திற்குத் தக்க இழப்பீடு பெற்றுத் தருவதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

.