மேனல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளில்தலைமை ஆசிரியர் தயாளன் தலைமையில்உற்சாக வரவேற்பு!செய்யாறு, ஜூன் 5 -மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதல் நாளில் வருகை புரிந்த மாணவ – மாணவிகள் அனைவருக்கும், பள்ளி சார்பில் மேள தாளங்களுடன் இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு அடுத்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 370 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கனிகிலுப்பு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் ( 55 ) பணியாற்றி வருகிறார். இவர், கடந்தாண்டு பொறுப்பேற்றது முதல் பள்ளிக்கு கூடுதல் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட கழிவறைகள், கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள், மாணவர்களுக்கான புதிய மேசைகள் என, அனைத்தும் தலைமை ஆசிரியர் தயாளன் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. குறிப்பிடத்தக்கது.இதனால், மாணவர்களின் சேர்க்கை இவ்வாண்டு அதிகரிக்கும் என, கிராம மக்கள் கூறுகின்றனர். தற்பொழுது கோடை விடுமுறை முடிந்து 4ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டது. இந்த திறப்புவிழாவையொட்டி பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள், மூவர்ண பலூன்கள், தோரணங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. சிவப்பு – பச்சை நிறங்களில் கம்பளங்கள் விரிக்கப்பட்டு பள்ளியே விழா கோலமாக காட்சியளித்தது.

தலைமை ஆசிரியர் தயாளன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைக்கண்ணு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களான குப்பன், துரைமுருகன், சமூக ஆர்வலர்களான ஏழாச்சேரி பாஸ்கரன் சந்தியா, மணிகண்டன் ஆகியோர் ஒன்றிலிருந்து பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். முதல் நாளில் பள்ளிக்கூடம் திறப்பால் மேனல்லூர் கிராமமே விழாக்கோலமாக குலுங்கியது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு மேனல்லூர் பள்ளி திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.