முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள்: தாய் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!வேலூர், மே 21-மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி, தாய்த் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மரியாதையுடனும், அமைதியான சூழலிலும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி ராணுவ வீரர் ரஞ்சித் குமார் தலைமையில், அவரது தோழர்களுடன் இணைந்து சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.மேலும், இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் நினைவுகளைப் போற்றினர்.
Leave a Reply