Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
கே. வி. குப்பம் அடுத்த காவனூரில் பாதாள கால்வாய் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம்!வேலூர், மே 26-வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காவனூர் பகுதியில் பாண்டியன் மதகு கால்வாயில் நீரை விடுவதற்கு ஏரியிலிருந்து பாதாள கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த புதிய கால்வாய் தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து, குடிநீர் ஆகியவற்றுக்கு கடும் இடையூறு ஏற்படும் என ஊர் மக்கள் கருதுகின்றனர். இதனால் பாதாளத்தில் கால்வாய் அமைக்கும் பணியை நிபந்தனைகள் இல்லாமல் நிறுத்த வேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையும் மீறி பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கே. வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ தென்றல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததுடன் பாதாள கால்வாய் அமைக்கும் பணியை தடைபடாது நடைபெற ஏற்பாடுகளை செய்தார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பணத்தை மோசடி செய்து ஏமாற்றிய ஐ ஃப் எஸ் மற்றும் எம் ஏ ஆர் சி நிதி நிறுவனங்களின் இயக்குநர்களை கைது செய்ய தயங்கும் காவல்துறை!வேலூர், மே 25-2026ல் திமுக தேர்தலில் தோல்விக்கு காரணமே வேலூர் சார்ந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மற்றுமொரு எம்ஏஆர்சி நிறுவனம். இந்த நிறுவனங்கள் வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் போன்று பல மாவட்டங்களில் பொதுமக்கள் பணம் ரூ. 50000 கோடி பணத்தை (ரூ. ஐம்பதாயிரம் கோடி) நிதி மோசடி செய்ததுஇந்த நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் வேலூரில் உள்ளனர். இவர்கள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன், மோகன் பாபு. இந்த முக்கிய குற்றவாளிகளை காவல் துறை இன்னமும் கைது செய்யவில்லை. முக்கிய குற்றவாளிகள் கைது செய்யாமல் இருக்க காவல்துறைக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமான நபர் விபச்சார தொழில் செய்து வந்த லக்ஷ்மி நாராயணன். வேலூரில் பிரபலமாக விபச்சார தொழில் செய்து வந்த இவரை இன்னும் கைது செய்யாமல் விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது மாவட்ட காவல்துறை. அதல பாதாளம் வரை பல பேருக்கு லஞ்சம் தாராளமாக வாரி வழங்கப்பட்டுள்ளது. மோசடியை அவர்கள் திமுக ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் போது சேகர்பாபு அமைச்சர் மற்றும் தயாநிதி மாறன் எம். பி .,போன்றவர்களை வரவழைத்து இந்த நிறுவனத்தை நிறுவி திறப்பு விழா நடத்தி உள்ளனர். பொதுமக்களிடம் இந்த நிறுவன இயக்குநர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்,எம்.பி., திறந்து வைத்த கம்பெனி என்றும், நம்பிக்கையான கம்பெனி என்றும் சொல்லி பொதுமக்களிடம் ரூ. 50000 கோடி பணத்தை தைரியமாக கொள்ளையடித்துள்ளனர்.இந்த பணத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். நான்காண்டுக்குப் பிறகு அதில் மூன்று இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். மிக முக்கிய புள்ளியான லக்ஷ்மணன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த விரக்தியில் பொதுமக்கள் உள்ளனர். இதில் முதலீடு செய்த ஐந்து லட்சம் குடும்பம், ஏழை, நடுத்தர மக்கள் தங்களது பிள்ளைகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம். கல்விக்காக சேர்த்து வைத்த பணம். வீடு கட்டுவதற்காக சேர்த்த பணம். இப்படி ஏழை, எளிய மக்களை ஏமாற்றிய ஐ எஃப் எஸ், மார்க் நிதி நிறுவனங்களால்5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இரண்டு லட்சம் குடும்பம் மனநோய் போன்ற இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .அரக்கோணம் மாவட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், இந்த நிதி நிறுவனத்தில் மிகப்பெரிய மையப்புள்ளி. தற்போது புழல் சிறையில் உள்ளார். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த இவர் திமுக ஆட்சிக்கு வந்தால் பணம் கிடைக்காது என்று ஒரு வதந்தியை பரப்பி விட்டுச் சென்று விட்டார். தற்போது மீண்டும் சிறைக்குச் சென்று விட்டார்.இதன் அடிப்படையில் தான் சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து வட மாவட்டங்களிலும் திமுக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் நலனை கருதி இதில் சம்பந்தமுள்ள இயக்குநர்கள் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். சில லீடர்கள் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை. முக்கியமானவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வேகமாக பரவி வருகிறது.இதுபோன்ற மோசடி நபர்களை அமைச்சர் மற்றும் எம். பி., அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் இப்படி தாங்கள் வியர்வை நீரை சிந்தி சம்பாதித்த பணம் மோசடி நபர்களால் பறிக்கப்படும். பொதுமக்களும் நடுவீதியில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆதலால் இது போன்ற தனியார் நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்யாமல் அரசு வங்கிகளில் முதலீடு செய்து தங்களது பணத்துக்கு உத்தரவாதத்துடன் சேமிப்பை தொடங்க வேண்டும் என்பது அனைவரது ஆவலாக உள்ளது.
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது. 20 கிராம் கஞ்சா பறிமுதல். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடவடிக்கை.
வேலூர் அருகே செங்கல் சூளையில் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் வர வேண்டும்”: தவெக ஒன்றிய செயலாளர்.. செங்கல் சூளை உரிமையாளரிடம் மிரட்டல்!வேலூர், மே 24-தமிழ்நாட்டில் தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடையே மாதம் ரூ.1 லட்சம் பணம் மாமுல் கேட்டு தவெக ஒன்றியச் செயலாளர் மிரட்டியிருப்பது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தங்களின் தவெக சர்க்காரை அமைத்துள்ளது. இப்படி இருக்கையில் புது சர்க்காருக்கு அவதூறு ஏற்படுத்துவதைப் போல நிர்வாகிகள் சிலர் நடந்துக் கொண்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கணியம்பாடியில், தவெக ஒன்றியச் செயலாளர் ஒருவர் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் வலுகட்டாயமாக ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,”நாங்கள் காலங்காலமாக இங்கு செங்கல் சூளை நடத்தி வருகிறோம். இது எங்கள் குடும்ப தொழில். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. ஆனால், இப்போது தவெக ஒன்றியச் செயலாளர் வந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டுகிறார்.எங்களைப் போல தொழில் செய்யும் பலரையும் அவர் மிரட்டியிருக்கிறார். பணம் தரவில்லை எனில் வேலை நடக்காது என்றும், வேலை செய்ய விட மாட்டோம் என்றும் பயமுறுத்துகிறார். மேலிடத்தில் சொல்லிதான் இப்படி செய்வதாகவும், இந்த இடத்திற்கு வர லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், அதை திரும்ப எடுக்கத்தான் இப்படி வசூலிப்பதாகவும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் சொல்லிதான் இப்படி செய்வதாக கூறியிருக்கிறார்.தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கட்சியின் பெயரை சிலர் இப்படி டேமேஜ் செய்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த மிரட்டல் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.வேலூர் மட்டுமல்ல.. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து விஷயத்தில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் இருக்க வேண்டும். இப்படியான கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை விஜய் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே குடிதண்ணீர் வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்! வேலூர், மே 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலை அருகே பல கிராமங்களுக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தது. ஆனால் அரசு அலுவலர்கள் இதை கவனத்தில் கொள்ளாது அலட்சியப் போக்கில் செயல்பட்டனர். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கிராம பொதுமக்கள் பொறுமை இழந்து நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளிமலை அருகே தங்களது வீடுகளில் உள்ள காலி குடங்களை எடுத்துக்கொண்டு வந்து சாலையின் நடுவில் வைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டொரு நாளில் தடைபடாத குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை செய்வதாக பொன்னை போலீசார் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வள்ளிமலைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண எம்எல்ஏ தீவிர ஆலோசனை !வேலூர் ,மே 24 -காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் முதல் வேலூர் கிரீன் சர்க்கிள் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண காட்பாடி எம்எல்ஏ டாக்டர் சுதாகர், மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தனசேகர் ஆகியோர் இன்று தீவிர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கவும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் சிரமம் அடைவதாக இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் தவிர 24 மணி நேரமும் இந்த வழித்தடத்தில் இயங்குவதாக எம்எல்ஏ புகார் தெரிவித்தார். குறிப்பாக கனரக வாகனங்கள் செல்வதை குறைந்தபட்சம் எவ்வளவு தடை செய்ய முடியுமோ அவ்வளவு தடை செய்ய போக்குவரத்து பிரிவு போலீசாரும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ வலியுறுத்தினார். இதையடுத்து இதுபோன்ற காரணங்களை நடைமுறைப்படுத்த, மாற்று வழித்தடங்களில் கனரக வாகனங்களை திருப்பி விடவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உறுதி அளித்தார்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலை!விரைந்து நடவடிக்கை எடுக்குமா? புதிய அரசு?
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கு மர்ம நபர்கள் இரவில் தீவைப்பு!வேலூர், மே 24-ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் மர்மநபர்கள்.வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜூப்பை நேற்று (23ம் தேதி) நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர்கள் யாரோ தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய் துறை குழுவினர் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த ஜீப்பை தண்ணீர் பீய்த்து அடித்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர். வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்ற ஜீப்பை மர்ம நபர்கள் இரவில் தீயிட்டுக் கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானம்!வேலூர், மே 23-திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கும் தானமாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா திரையரங்குகளில் டிக்கெட் விலையை ரூ.250 ஆக உயர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை மனு!வேலூர்,மே 23-தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டண விலை உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 190, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் ரூபாய் 150 என தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் பொழுதுபோக்கு வரியையும் நீக்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சமர்ப்பித்துள்ளனர். இதனால் திரையரங்குகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமா? அல்லது பழைய கட்டணமே தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1
…
26
27
28
…
85
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.