பொதுமக்கள் பணத்தை மோசடி செய்து ஏமாற்றிய ஐ ஃப் எஸ் மற்றும் எம் ஏ ஆர் சி நிதி நிறுவனங்களின் இயக்குநர்களை கைது செய்ய தயங்கும் காவல்துறை!வேலூர், மே 25-2026ல் திமுக தேர்தலில் தோல்விக்கு காரணமே வேலூர் சார்ந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மற்றுமொரு எம்ஏஆர்சி நிறுவனம். இந்த நிறுவனங்கள் வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் போன்று பல மாவட்டங்களில் பொதுமக்கள் பணம் ரூ. 50000 கோடி பணத்தை (ரூ. ஐம்பதாயிரம் கோடி) நிதி மோசடி செய்ததுஇந்த நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் வேலூரில் உள்ளனர். இவர்கள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன், மோகன் பாபு. இந்த முக்கிய குற்றவாளிகளை காவல் துறை இன்னமும் கைது செய்யவில்லை. முக்கிய குற்றவாளிகள் கைது செய்யாமல் இருக்க காவல்துறைக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமான நபர் விபச்சார தொழில் செய்து வந்த லக்ஷ்மி நாராயணன். வேலூரில் பிரபலமாக விபச்சார தொழில் செய்து வந்த இவரை இன்னும் கைது செய்யாமல் விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது மாவட்ட காவல்துறை. அதல பாதாளம் வரை பல பேருக்கு லஞ்சம் தாராளமாக வாரி வழங்கப்பட்டுள்ளது. மோசடியை அவர்கள் திமுக ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் போது சேகர்பாபு அமைச்சர் மற்றும் தயாநிதி மாறன் எம். பி .,போன்றவர்களை வரவழைத்து இந்த நிறுவனத்தை நிறுவி திறப்பு விழா நடத்தி உள்ளனர். பொதுமக்களிடம் இந்த நிறுவன இயக்குநர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்,எம்.பி., திறந்து வைத்த கம்பெனி என்றும், நம்பிக்கையான கம்பெனி என்றும் சொல்லி பொதுமக்களிடம் ரூ. 50000 கோடி பணத்தை தைரியமாக கொள்ளையடித்துள்ளனர்.இந்த பணத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். நான்காண்டுக்குப் பிறகு அதில் மூன்று இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். மிக முக்கிய புள்ளியான லக்ஷ்மணன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த விரக்தியில் பொதுமக்கள் உள்ளனர். இதில் முதலீடு செய்த ஐந்து லட்சம் குடும்பம், ஏழை, நடுத்தர மக்கள் தங்களது பிள்ளைகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம். கல்விக்காக சேர்த்து வைத்த பணம். வீடு கட்டுவதற்காக சேர்த்த பணம். இப்படி ஏழை, எளிய மக்களை ஏமாற்றிய ஐ எஃப் எஸ், மார்க் நிதி நிறுவனங்களால்5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இரண்டு லட்சம் குடும்பம் மனநோய் போன்ற இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .அரக்கோணம் மாவட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், இந்த நிதி நிறுவனத்தில் மிகப்பெரிய மையப்புள்ளி. தற்போது புழல் சிறையில் உள்ளார். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த இவர் திமுக ஆட்சிக்கு வந்தால் பணம் கிடைக்காது என்று ஒரு வதந்தியை பரப்பி விட்டுச் சென்று விட்டார். தற்போது மீண்டும் சிறைக்குச் சென்று விட்டார்.இதன் அடிப்படையில் தான் சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து வட மாவட்டங்களிலும் திமுக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் நலனை கருதி இதில் சம்பந்தமுள்ள இயக்குநர்கள் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். சில லீடர்கள் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை. முக்கியமானவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வேகமாக பரவி வருகிறது.இதுபோன்ற மோசடி நபர்களை அமைச்சர் மற்றும் எம். பி., அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் இப்படி தாங்கள் வியர்வை நீரை சிந்தி சம்பாதித்த பணம் மோசடி நபர்களால் பறிக்கப்படும். பொதுமக்களும் நடுவீதியில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆதலால் இது போன்ற தனியார் நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்யாமல் அரசு வங்கிகளில் முதலீடு செய்து தங்களது பணத்துக்கு உத்தரவாதத்துடன் சேமிப்பை தொடங்க வேண்டும் என்பது அனைவரது ஆவலாக உள்ளது.