சினிமா திரையரங்குகளில் டிக்கெட் விலையை ரூ.250 ஆக உயர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை மனு!வேலூர்,மே 23-தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டண விலை உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 190, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் ரூபாய் 150 என தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் பொழுதுபோக்கு வரியையும் நீக்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சமர்ப்பித்துள்ளனர். இதனால் திரையரங்குகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமா? அல்லது பழைய கட்டணமே தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.