காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக பொதுக்கழிவறை அமைக்காமல் இயங்கும் பேருந்து நிலையம்!வேலூர், ஏப். 23-வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. இந்த பகுதியில் காட்பாடியில் இருந்து குடியாத்தம், சென்னை, திருத்தணி, விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை ,திருப்பதி, சித்தூர், கர்னூல் ,கடப்பா, புத்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த சித்தூர் பேருந்து நிலையத்தில் விஐடி பல்கலைக்கழகம் இயக்கும் தனியார் கழிப்பறையே பல ஆண்டுகளாக பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கழிவறையும் இரவு 7:30 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தவியாய் தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக பெண் பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு பிரசவ வலி போன்று அவதிப்பட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதே நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி நிர்வாகமானது பொதுக்கழிப்பறையை கட்டித் தராமல் கடைகளை மட்டும் கட்டி வாடகை விட்டு வசூல் செய்து கொள்கிறது. மக்கள் நலனில் அக்கரையில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புகார் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செவிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு பேருந்து நிலையம் என்றால் அடிப்படை தேவை முதலில் கழிப்பறை இருக்க வேண்டும். இந்த கழிப்பறையே இல்லாத நிலைக்கு சித்தூர் பேருந்து நிலையம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். அதே போன்று பயணிகளின் தாகம் தீர பொதுவாக ஒரு குடிநீர் தொட்டியும் இங்கே ஏற்படுத்தித் தரவில்லை மாநகராட்சி நிர்வாகம். இது போன்ற குறைகளை இதுநாள் வரையில் களையாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதை வேலூர் மாவட்டத்தில் இது நாள் வரை பதவி வகித்து வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதையே இந்த செயல் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுநாள் வரை அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது ஏனோ என தெரியவில்லை. வாய்க்கால்களை கட்டுவதிலும், சாலை அமைப்பதிலும், சிறு பாலம் கட்டுவதிலும் குறியாக இருக்கின்றார்களே தவிர அடிப்படை தேவையான கழிவறையை பற்றி யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிய வருகிறது. ஆதலால் இம்முறையாவது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சித்தூர் பேருந்து நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுக்கழிவறை ஒன்றை அமைத்து தந்து பயணிகள் இயற்கை உபாதைகளை சிரமம் இன்றி கழிப்பதற்கு பேருதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செவிமெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தருவாரா? என்பது காட்பாடி தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை வெற்றி பெறும் வேட்பாளர் செய்து தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக பொதுக்கழிவறை அமைக்காமல் இயங்கும் பேருந்து நிலையம்!வேலூர், ஏப். 23-வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. இந்த பகுதியில் காட்பாடியில் இருந்து குடியாத்தம், சென்னை, திருத்தணி, விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை ,திருப்பதி, சித்தூர், கர்னூல் ,கடப்பா, புத்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த சித்தூர் பேருந்து நிலையத்தில் விஐடி பல்கலைக்கழகம் இயக்கும் தனியார் கழிப்பறையே பல ஆண்டுகளாக பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கழிவறையும் இரவு 7:30 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தவியாய் தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக பெண் பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு பிரசவ வலி போன்று அவதிப்பட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதே நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி நிர்வாகமானது பொதுக்கழிப்பறையை கட்டித் தராமல் கடைகளை மட்டும் கட்டி வாடகை விட்டு வசூல் செய்து கொள்கிறது. மக்கள் நலனில் அக்கரையில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புகார் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செவிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு பேருந்து நிலையம் என்றால் அடிப்படை தேவை முதலில் கழிப்பறை இருக்க வேண்டும். இந்த கழிப்பறையே இல்லாத நிலைக்கு சித்தூர் பேருந்து நிலையம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். அதே போன்று பயணிகளின் தாகம் தீர பொதுவாக ஒரு குடிநீர் தொட்டியும் இங்கே ஏற்படுத்தித் தரவில்லை மாநகராட்சி நிர்வாகம். இது போன்ற குறைகளை இதுநாள் வரையில் களையாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதை வேலூர் மாவட்டத்தில் இது நாள் வரை பதவி வகித்து வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதையே இந்த செயல் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுநாள் வரை அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது ஏனோ என தெரியவில்லை. வாய்க்கால்களை கட்டுவதிலும், சாலை அமைப்பதிலும், சிறு பாலம் கட்டுவதிலும் குறியாக இருக்கின்றார்களே தவிர அடிப்படை தேவையான கழிவறையை பற்றி யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிய வருகிறது. ஆதலால் இம்முறையாவது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சித்தூர் பேருந்து நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுக்கழிவறை ஒன்றை அமைத்து தந்து பயணிகள் இயற்கை உபாதைகளை சிரமம் இன்றி கழிப்பதற்கு பேருதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செவிமெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தருவாரா? என்பது காட்பாடி தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை வெற்றி பெறும் வேட்பாளர் செய்து தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காட்பாடி தொகுதியில் வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி!வேலூர்,ஏப்.23-தமிழகத்தில் இன்று (23ஆம் தேதி) சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம், காட்பாடி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. சுத்தம் செய்த பணிகள் நிறைவு பெற்றதும் கொசுக்களை ஒழிப்பதற்கு புகை அடிக்கப்பட்டது. வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சிரமமின்றி பணியாற்ற வாக்குப்பதிவு அறை சத்தம் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சந்திப்பு: தேர்தல் தொடர்பான விரிவான விளக்கம் அளிப்பு!வேலூர், ஏப்.23-தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதி சோதனை சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் பணிக்கு வரும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை தேவைகளான தங்கும் வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவர் குழுவும், தீயணைப்புத்துறை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குடியாத்தம் தனி தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அதிமுக வேட்பாளர் பரிதா!வேலூர், ஏப். 22-குடியாத்தம் தொகுதியில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 7 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஜி.பரிதாவே இந்த முறை மீண்டும் களம் காண்கிறார். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சற்றும் கவலைப்படாமல், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணி, கட்சிப் பணி, பேரணாம்பட்டு அரிமா சங்கப் பணி என்று பொதுச்சேவையில் ஈடுபட்டதே அவருக்கு பிளஸ் பாயின்ட். செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாகமாய் வரவேற்கும் மக்கள் அவரை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புவோம் என்று உரத்தக் குரலில் ஒருசேர முழங்குகின்றனர்.திமுகவே போட்டியிடும் என்ற நிலையில் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு சீட் கொடுத்ததோடு, வெளியூர் நபரான கே.பி.பிரதாப் வேட்பாளர் என்பதால் காணப்படும் அதிருப்தியும் பரிதாவுக்கு போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கின்றன. தேர்தல் பணியை தொய்வு இல்லாமல் செய்து வந்த பரிதாவுக்கு இம்முறை வெற்றி நிச்சயம் என்பதே மக்களின் டாக்.குடியாத்தம் ரிசர்வ் தொகுதியில், அதிமுக சார்பில் ஜி.பரிதா, திமுக கூட்டணியில் தேமுதிகவின் கே.பி.பிரதாப், தவெக சார்பில் மியூஸிக் டீச்சர் சிந்து, நாம் தமிழர் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இமலன், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் தபிதாள் உட்பட பலர் களம் காண்கினறனர்.தோல்வியுற்றாலும் மனம் தளராமல் 5 ஆண்டுகள் மக்கள் பணியும், கடந்த சில மாதங்களில் வேட்பாளராகி விடுவோம் என்று தலைமை அறிவித்த உறுதிமொழியால் தொகுதியை பல முறை ரவுண்ட் வந்துவிட்ட ஜி.பரிதாவுக்கு தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பரிட்சயம். இதோடு, கிளைக்கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரடியாக அறிமுகமாகிவிட பரிதாவுக்கு செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பு என்றால் கேட்கவா வேண்டும்.குடியாத்தம் பொது தொகுதியாக இருந்தபோது 2006 எம்எல்ஏ தேர்தலின்போது, அதிமுக சார்பில் போட்டியிட்ட நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தனக்கு எதிராக தனித்துப் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் பெற்ற 20 ஆயிரம் வாக்குகளால், தான் 1653 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஜி.லதாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அன்று அந்த சுதீஷ் எம்.பி.யாகிவிட்ட நிலையில், தனக்கான மாபெரும் அரசியல் வாய்ப்பை இழக்க நேரிட்ட தேமுதிகவை வீழ்த்திவிட வேண்டும் என்று ஜே.கே.என்.பழனியும் பொது முகவராக அதிமுகவின் பரிதாவுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கிறார். அதிமுகவின் கஸ்பா மூர்த்தி, எல்.சீனிவாசன், பொகளூர் பிரபாகரன், கள்ளூர் சிவா, வக்கீல் கோவிந்தசாமி என்று பெரிய பட்டாளமே பரிதாவின் வெற்றிக்கு துணை நிற்கிறது.பாமகவின் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் குமார், நகர செயலாளர் புவனேஸ்வரிபேட்டை குமார் உட்பட நிர்வாகிகள் இளைஞர் படையோடு பரிதாவுக்கு தோள் கொடுக்கின்றனர். பாஜகவின் ஜெகன், புரட்சி பாரதம் கஸ்பா மேகநாதன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் களப் பணியை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை அதிமுக வேட்பாளர் பரிதா சென்னைக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு பள்ளிகொண்டாவுக்கு வருகை தந்த தமமுக தலைவர் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவோரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தனது கட்சியினருக்கு அளித்த உத்தரவைப் பின்பற்றி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் லாவண்யா தினேஷின் பெண்கள் படை தொகுதியை ரவுண்ட் வருகிறது. பரிதாவும் நூதன பிரசாரத்தில் தூள் கிளப்பினார். போண்டா சுடுதல், டீ போட்டு தருதல், குழந்தைகளை அழைத்து மகிழ்தல், உழவர் சந்தை அருகில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து நுகர்வோர் மனதில் தனி இடம் பிடித்தார். இவ்வாறு வாக்காளர்களோடு நெருங்கி பழகும் அணுகுமுறை பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.திமுக சார்பில் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு தொகுதி அளிக்கப்பட்டதாலும், அதிலும் உள்ளூரில் உள்ள குடியாத்தம் ரமணி போன்றோருக்கு சீட் அளிக்காமல், காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கே.பி.பிரதாப்புக்கு சீட் வழங்கப்பட்டதாலும் திமுக கூட்டணியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், எம்எல்ஏ அமலு விஜயன், மாவட்ட துணை செயலாளரும் கல்லூரி முதல்வருமான எம்.பிரதாப்குமார் மற்றும் பலர் தீவிர களப்பணியை ஆற்றுகின்றனர். இருந்தாலும், உள்ளூர் நிர்வாகிகள் இன்னமும் சோர்விலேயே இருக்கின்றனர். காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாததால், காங்கிரஸாரிடையே சோகமும் இருக்கிறது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.சுரேஷ்குமாரும் தனது அதிருப்தியை பேஸ் புக்கிலேயே வெளிப்படுத்தியுள்ளார். மாவட்ட துணை சேர்மன் கிரு்ஷ்ணவேணி, ஒன்றிய காங்கிரஸ் தலைவர்கள் வீராங்கன், சங்கர் போன்றோர் விரக்தியில் இருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், விரக்தியில் செஞ்சட்டைகளை அணியவே மறுக்கின்றனர். இதனால் பிரதாப்பின் பிரசாரம் எடுபடவில்லை என்ற வேதனை தொகுதி முழுவதும் எதிரொலிக்கிறது.தவெகவின சார்பில் போட்டியிடும் மியூஸிக் டீச்சர் சிந்துவோ பேரணாம்பட்டு பகுதியில் அறிமுகம் இல்லை. இதனால், குடியாத்தம் நகரத்தையும், சுற்றுப்புற கிராமத்தையுமே சுற்றி சுற்றிவருகிறார். நாம் தமிழர் கட்சியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் இமலன் சுற்றிசுற்றி வருகிறார்.சசிகலாவின் அஇபுதமமுக கட்சி வேட்பாளர் தபிதாள் , 5 பட்டங்களைப் பெற்றவர், இலவசமாக டியூஷன் சென்டர் நடத்துபவர், சமூக சேவகர் என்று பெயரை பெற்றிருகிறார். இவரிடம் படித்த மாணவர்கள் குடியாத்தம் தொகுதியில் வாட்ஸ் ஆப்புகளில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தபிதாளின் மகன் ரித்திக் , குடியாத்தம் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இருந்தாலும் அவர் தனக்கு கட்சியே முக்கியம் என்று தேமுதிக வேட்பாளர் பிரதாப்புக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுவருவது தொகுதியில் ஹைலைட்.சசிகலா கட்சியில் போட்டியிட குடியாத்தம் தொகுதியில் பத்து பேருக்கு மேல் சீட் கேட்டும், தபிதாளுக்கு கிடைத்தது. சீட் கேட்டு கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தவர்களிடம் தபிதாள் நேரடியாக அணுகி பேசி, அவர்களை தனக்கு ஆதரவாக பிரசாரத்தில் வைக்கும் முயற்சியில் உள்ளார். இருப்பினும், சசிகலா கட்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளோ, பொறுப்பாளர்களோ இல்லாததால், தேர்தல் பணிகளை வகுப்பதில் வேட்பாளர் தபிதாளுக்கு சிரமமாக இருக்கிறது. இருந்தாலும், அவரிடம் படித்த மாணவர்கள், கட்சி நிர்வாகிகள் துணையாக தொகுதியை வலம் வருகின்றனர். பேண்டு வாத்தியம் முழங்க அவரது பிரசாரம் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களையே அசத்துகிறது. மொத்தத்தில், டில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடியை நெசவாளர்களோடு இணைந்து தயாரித்த மக்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு யாரை அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டனர். வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 2500 மற்றும் ரூபாய் ஆயிரம் என்று வேட்பாளர்கள் பணத்தை வாரி இரைத்தாலும் குடியாத்தம் தொகுதியில் இம்முறை வெற்றிக்கனியை பறிப்பது அதிமுக வேட்பாளர் பரிதா என்பதை யாராலும் மாற்ற முடியாது என்பது நிதர்சனம்.

கே.வி.குப்பத்தில் ஜெகன் மூர்த்திக்கு ஜெயம்!வேலூர், ஏப். 21-முழுக்க முழுக்க கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்கும் சிட்டிங் எம்எல்ஏ புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றியை நோக்கி வலம் வருகிறார். யோகம் அவருக்கு அடிக்கும் என்பது தொகுதியின் ஹைலைட்.2008-இல் தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவான கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறையும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.2011-இல் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், 2016-இல் அதிமுகவின் ஜி.லோகநாதன், 2021-இல் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி என அதிமுக அணியினரே ஜெயித்தனர்.இந்த முறையும் பூவை ஜெகன்மூர்த்தியே களம் பலம் இறங்குகிறார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த தொகுதி என்பது அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியை வெற்றி பெற்றே தீருவேன் என்ற கட்டாயத்தில் உள்ளார்.தொகுதி உருவான நாளிலிருந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று, திமுகவை தோல்வியை தழுவ செய்த தொகுதி கே.வி. குப்பம். இந்த முறை எப்படியாவது காட்பாடியோடு, கே.வி.குப்பத்தையும் எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என்று கட்டாயத்தில் கதிர் ஆனந்த் தொகுதியை சுற்றி சுற்றி வலம் வருகிறார்.’வைட்டமின் ப’வை அள்ளி அள்ளி விட்டாலும், இதுவரை கிள்ளி கிள்ளி கொடுத்தவர் என்ற பெயரெடுத்த கதிர் ஆனந்தை மக்கள் ரசிக்கவில்லை.உங்களுக்காக செருப்பாய் உழைக்கிறேன் என்று கதிர் ஆனந்த் சொல்வதை மக்கள் ஏற்கவும் தயாராக இல்லை.ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஜெகன் மூர்த்தி தான் செய்த சாதனைகளை பட்டியலிடுவதோடு, நிறைவேற்ற முடியாத சாதனைகளுக்கு திமுக அரசே காரணம் என்பதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் சரியான பதில் கூறுகிறார்.ஐந்தாண்டுகளில் எந்தவிதமான புகாருக்கும் ஆளாகாதவர் ஜெகன்மூர்த்தி என்பது மக்கள் மத்தியிலே அவருக்கு இருக்கும் நற்பெயர். திமுக சார்பில் களம் இறங்கும் ராஜேஸ்வரி 2011ல் வேலூர் மேயர் வேட்பாளராக நின்று தோற்றவர். அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியை உதறி விட்டு அப்போது தேர்தல் களம் கண்டவர். அதன்பின் 15 ஆண்டுகள் தன் மருத்துவமனையிலேயே பணியாற்றி விட்டு தற்போது தேர்தலில் களம் இறங்கி இருப்பது திமுகவினரை ரசிக்க வைக்கவில்லை.திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர் தொகுதியை வலம் வந்தாலும் மன வருத்தம் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.காட்பாடி, கே. வி. குப்பம் ஆகிய இரு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக உள்ள கதிர் ஆனந்துக்கு நெருக்கடி குழு கொடுக்கவும் திமுகவில் ஒரு தரப்பு தயாராகவே இருக்கிறது.மொத்தத்தில் ஜெகன்மூர்த்திக்கு ஜெயமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள்.

கதர் சட்டைகளை கசக்கிப் பிழியும் மாவட்டம்!திருப்பத்தூர், ஏப். 22-திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ. விஜய் இளஞ்செழியன் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் கதர் சட்டை நிர்வாகிகளுக்கு குறைத்து வழங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய் இளஞ்செழியன் பதவியேற்ற நாட்களில் இருந்து நிர்வாகிகளை மதிக்காதது, தன்னிச்சையாக செயல்படுவது என்று பல்வேறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு கட்சித் தொண்டர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் குழுவினரை மதிக்காமல் தன்னிச்சையாக விஜய் இளஞ்செழியன் செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த கிருஷ்ண சந்தர் என்பவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, க்ரிஷ் சோடங்கர், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும், திமுக அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கும் பல்வேறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.”நகர ஒன்றிய தலைவர்களுக்கு 50 ஆயிரம் வழங்க சொல்லி கொடுத்தால் விஜய் இளஞ்செழியன் வழங்கியதோ பத்தாயிரம் ரூபாய் . முக்கிய நிர்வாகிகளுக்கு 25 ஆயிரம் வழங்க சொல்லிக் கொடுத்தால் வழங்கியதோ ஐந்தாயிரம் ரூபாய். கிளை நிர்வாகிகளுக்கு 5 ஆயிரம் வழங்கிய சொல்லிக் கொடுத்தால் வழங்கியது ஆயிரம் ரூபாய் ” என்று கதர் சட்டைகள் குமுறுகின்றனர்.