முதல்வர், துணை முதல்வர் வருகையின் போது காங்கிரஸ் சார்பில் ஆயிரம் பேரை அழைத்து வருமாறு அழைக்கப்பட்ட பணத்திலேயே சுருட்டி பாக்கெட்டில் போட்டுவிட்டு, 100 பேரையே கூட்டிச்சென்று திமுகவினருக்கு அல்வா கொடுத்தவர் விஜய் இளஞ்செழியன் என்று அவர்களின் தனித் திறமையை சொல்லிப் பெருமைப்படுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

இவ்வளவு ஏன் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது திருப்பத்தூரில் மாவட்ட தொண்டர்கள் தங்களை அழைத்துச் செல்லுமாறு மாவட்ட தலைவரிடம் கேட்டபோது, உள்ளூரிலே கூட்டணிக்கு வேலையை பாருங்கள் என்று பெருந்தன்மையோடு கூறி இருக்கிறார் என்று விஜய் இளஞ் செழியன் என்று அவருடையஎக்ஸ்ட்ரா மில்லியன் பவரை சொல்கின்றனர் கதர் சட்டைகள்.
விஜய் இளஞ்செழியன் தந்தை முன்னாள் எம்பி ஏ. ஜெயமோகன் கூட்டணிக் கட்சியை எதிர்பார்க்காமல் தன் கை காசை போட்டு கட்சியை வளர்த்தவர் என்றும் நாடி வந்த தொண்டர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் அவர் என்று கூறுகின்றனர் கதர் சட்டைகள்.
மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ்நாட்டில் இன்றளவுக்கு மதிக்கப்படும் காங்கிரஸ் முன்னணி தலைவர் ஜெயமோகனின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படும் விஜய் இளஞ்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜன்பத் ரோடுக்கும், அக்பர் ரோடுக்கும், சத்தியமூர்த்தி பவனுக்கும் புகார் மனுக்கள் பறக்கின்றன.










Leave a Reply