அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 80வது ஆண்டு சுதந்திர தின விழா: விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தஜே.சி.கே.சீனுவாசன்!செய்யாறு, ஆக. 16 -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 80வது ஆண்டு சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.வெம்பாக்கம் தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனுவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.செய்யாறு அடுத்துள்ளது அழிவிடைதாங்கி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் தி.மு.க., மத்திய ஒன்றிய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன், பள்ளிகளுக்கு இடையே வட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பரிசு, விளையாட்டு சீருடைகளை வழங்கி கௌரவித்தார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர்கள் சேகர், மணிகண்டன், கிளைக் கழக செயலாளர் நரசிம்மன், பன்னீர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு சுதந்திர விழாவினை சிறப்பித்தனர்.