வேலூரில் ஆசிரியர் இல்ல கூட்டரங்கில் ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு கழக பேரவை கூட்டம்!வேலூர், ஆக. 10-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, பில்டர் பெட் சாலையில் உள்ள ஆசிரியர் இல்ல கூட்டரங்கில், ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு கழகத்தின் பேரவை கூட்டம் கழகத் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இதில் செயலவை உறுப்பினர் ஷீலா ராணி வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சித்ரா திருக்குறளை வாசித்தார். பொதுச் செயலாளர் செல்லமுத்து ஆண்டறிக்கையை சமர்ப்பித்து கடந்த ஆண்டின் செயல்பாடுகளை விளக்கினார். பொருளாளர் ஞானசிகாமணி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். திருவருள் உலகநாதன், சேட்டு, சுந்தரேசன், சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ஆசிரியர் இல்லத்தின் கூட்ட அரங்குகளை புதுப்பித்தல், கூடுதல் தங்கும் அறைகள் அமைத்தல், செயற்குழு, செயலவை மற்றும் பேரவை உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா ஏற்பாடு செய்தல், ஆசிரியர் இல்ல மடல் மற்றும் அடுத்த ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்புக் குழு அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் 11 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.மேலும், கழகத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கு அறங்காவலர் துரை கருணாநிதி நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சோகாராமன், குமாரசாமி, வேலவன், ஜெயபால், முருகன், மாணிக்கம், அபரஞ்சிதம், சித்ரா, குணபூஷணம், சோபனா, சௌதாராணி, டைட்டஸ், தேற்றரவாளன், நூர்முகமது உள்ளிட்ட செயலவை, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உள்ளூர் செயலாளர் அல்போன்ஸ்கிரி நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுபெற்றது.