
காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வசூல் வேட்டையில் ஈடுபடும் ஃபோர்மேன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் அன்னை நகர் பகுதியில் இளமின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஃபோர்மேனாக சிவலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்துக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் இன்னும் பிற தேவைகளுக்காக செல்லும் நுகர்வோர்களை மறித்து அவர்கள் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி எப்படியாவது பணம் வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த ஃபோர்மேன் சிவலிங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் இவருக்கு பதவி உயர்வுகள் கொடுத்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மின்வாரியம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் இவர் நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றும், எனக்கு பதவி உயர்வும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு இதே அலுவலகத்தில் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இவரை மின்வாரியம் விடுவித்து இவரை கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணம் மற்றும் இவருக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் இவரைச் சுற்றி வலம் வந்தபடி உள்ளன. பல்வேறு சிக்கல்கள் ஆன சட்ட ரீதியாக பிரச்சனைகள் உள்ள இடங்களில் கூட இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய மின் இணைப்புகள் கொடுப்பது மற்றும் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையிலும் இவர் இதுநாள் வரை சிக்காமல் தப்பித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லஞ்சம் வாங்கிய பணத்தை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் பத்திரப்படுத்திவிட்டு வருவது தான் இவரது வழக்கமாக உள்ளது. இவரை பார்த்தால் பசு போன்று தெரியும். ஆனால் பாய்ந்தால் புலி. அதாவது வசூல் வேட்டை புலி என்று சொன்னால் அதற்கு இவரைத்தான் உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது பணி மிகவும் கேவலமாக உள்ளது. மின் நுகர்வோர்கள் இவரை பார்த்தாலே அஞ்சி அலறி அடித்து ஓடும் அவலம் அறுவெருக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொருத்தவரை இவர் நினைத்தது தான் சட்டம் என்று இளமின் பொறியாளரை ஓரங்கட்டி விட்டு இவரது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவலிங்கம் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒரு கண் வைத்தால் அந்த பொறியில் இந்த திமிங்கலம் கட்டாயம் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் மனது வைக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் செயல்பாடுகளை இனி பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply