பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் ஸ்ரீ பாலமுருகனுக்கு நேர்த்திக்கடன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு அடுத்த மூலகேட் பகுதியில் வேலாடும் தணிகை மலையில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் ஆடி மாத கிருத்திகையில் பறவைக்காவடி மற்றும் வேல் அலகு குத்தியும் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள தங்களது நேர்த்திக்கடனை வேண்டியது போல செலுத்தி வருவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வேலாடும் தணிகை மலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திற்கு பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அணைக்கட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.