
விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக எழில்வேந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் நிலையத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வில் அவர் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டு தனது பணியைத் தொடங்கினார். பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்கவும், சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பொதுமக்கள் தன்னை தொடர்பு கொண்டு புகார்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.










Leave a Reply