
காட்பாடி – வேலூர் பாலாறு ரயில்வே மேம்பாலம் மீது ரயிலில் சிக்கி ஒருவர் பலி!வேலூர், ஆக. 6-வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கண்ட்டோன்மெண்ட் ரயில் நிலையம் செல்லும் பாதையில் பாலாற்றின் மீதுள்ள ரயில்வே மேம்பாலத்தின் தண்டவாளத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்துதகவல் அறிந்து அங்கு சென்ற காட்பாடி இருப்பு பாதை போலீசார் இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காட்பாடி இருப்புப் பாதை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? , தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்கி உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










Leave a Reply