சாலையில் நடந்து சென்றவர் ஆட்டோ மோதி பரிதாப பலி! வேலூர் , ஜூன் 28-வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் சிறு வங்கியைச் சேர்ந்தவர் லிவிகுமார் (62) .கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து மேல்பட்டி ரோட்டில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி அவர் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதை யடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.