கீழ்மட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிமாணவர்களுக்குநோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா!செய்யாறு, ஜூன் 24 -செய்யாறு அடுத்தகீழ்மட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளையொட்டி செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கும் விழா கீழ்மட்டை கிராமத்தில் நடந்தது.விழாவிற்கு அனக்காவூர் த.வெ.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார்.‌ இணை செயலாளர் சூரியா முன்னிலை வகித்தார். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். இதைத் தொடர்ந்து கீழ்மட்டை கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் மேற்கு ஒன்றிய இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் யோகேஸ்வரி, ஊராட்சி செயலர் பார்த்தசாரதி, இணைச் செயலாளர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.