மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”;; மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் இன்று (11.05.2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 140 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இம்முகாமில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிகளின் மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளும் மற்றும் 01 பயனாளிக்கு எல்போ ஊன்றுகோலும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, வழங்கினார்.