
தவெக அமைச்சரவையில் சகாயம் ஐஏஎஸ் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர்?வேலூர், மே 6-தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட ஏற்பாடு எனவும் சூசகம்.தமிழகத்தின் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கனிமவள கொள்ளையர்களுக்கு காப்பு கட்ட ஏற்பாடு என தகவல்.இயற்கையை பாதுகாக்க தவெக நடவடிக்கை எடுக்கும் சிறப்பு முயற்சி என தகவல்.தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு முற்றுகட்டை வைக்க கனிம வள கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி தகவலாக ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை தவெக அமைச்சரவையில் சேர்த்து அவரை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறைக்கு அமைச்சராக்கவும் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சரவையில் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சூசகமாக தகவல்கள் வெளியாகி உள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.ஏற்கனவே கனிமவள கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதனால் அவர் திமுக மற்றும் அதிமுக அரசுகளால் பந்தாடப்பட்டு முக்கிய பதவிகளில் அவரே தொடர விடாமல் செய்தனர்.மேலும் அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கனிம வள கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் ஆய்வு செய்தபோது அரசு தரப்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே ஆதாரங்களை காப்பாற்ற சுடுகாட்டில் கட்டில் போட்டு இரவு உறங்கியவர் என்பதும் அது அவருடைய நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தற்போது புதிதாக ஆட்சி அமைக்கும் தவெக தலைவர் விஜய் அவர்கள் புதிய அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக சகாயம் அவர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவலால் கனிமவள கொள்ளையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இயற்கையை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அதனால் கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவையில் அது தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பான அளவில் தமிழகத்தை பாதுகாக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொண்டு கனிமவள கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவர் விஜய் அவர்களின் முக்கிய நடவடிக்கையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆகவே தமிழகத்தில் கனிமவள கொள்ளையர்களுக்கு காப்பு கட்டும் நடவடிக்கையை தவெக எடுக்கும் என்பதுதான் தற்போதைய செய்தியாக உள்ளது.










Leave a Reply