திருவண்ணாமலைஅ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன்,அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம் !செய்யாறு, மே 17 -திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன், த.வெ.க.,வில் நேற்று இணைந்தார். இவருக்கு, த.வெ.க.,வின் ஒருங்கிணைப் பாளரும் – அமைச்சருமான செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி தவெகவில் அன்புடன் வரவேற்று இணைத்துக் கொண்டார்.திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மா.கி.வரதராஜன் ( 68 ). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கண்ட பதவியை வகித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் உள்ள இவர், அ.தி.மு.க.,வில் பொறுப்பு வகித்த போது, கடந்த 2006ம் ஆண்டு செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இதுதவிர, இவருக்கு அ.தி.மு.க.,வில் தொடர்ந்து 5 முறை ஒன்றிய செயலாளராக பதவியும் வழங்கப்பட்டது. இவரது மூத்த – இளைய மகன்களும் அரசியலில் இருந்து வருகின்றனர். மூத்த மகன் வசந்தராஜ் ( 37 ) முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இளைய மகன் வினோத் பிசாத் ( 35 ). அ.ம.மு.க.வில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். மொத்தத்தில் இவரது குடும்பமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மாற்றம் காரணமாகஅ.ம.மு.க.,வின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்மா.கி.வரதராஜன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப் பாளரும், அமைச்சருமான செங்கோட்டையனை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் த.வெ.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி வரவேற்று தவெகவில் இணைத்துக் கொண்டார். மா.கி.வரதராஜனின் இரு மகன்களும் த.வெ.க.,வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் அணைக்கட்டு அதிமுக எம்.எல்.ஏ., த.வேலழகன் சுவாமி தரிசனம்!வேலூர், மே 16-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் நடைபெற்ற புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு பெருவிழாவில், அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான த.வேலழகன் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் சார்பில்‌ எம்.எல்.ஏ., த.வேலழகனுக்கு பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து சிறப்பு கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் ஜெ.கே.என். பழனி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் காடை ஜி.பி.மூர்த்தி, பேரணாம்பட்டு நகர செயலாளர் எல்.சினிவாசன், குடியாத்தம் கைத்தறி காவலன் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிரசு திருவிழாவை சிறப்பித்தனர்.

வைகாசி அமாவாசைக்காக மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர்,மே 16-வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி மே 16 முதல் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 15 பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 15 பேருந்துகளும் என மொத்தம் 55 சிறப்பு அரசு பேருந்துகளை மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கண்டித்து போராட்டம் அறிவிப்பு: உதயசந்திரன் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்!வேலூர்,மே 13-மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வேளையில் இதுநாள் வரை நிதி அமைச்சர் நியமிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தணிக்கை துறைகளில் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவசர கதியில் செயல்படுத்த தீவிரம் காட்டும் தலைமை தணிக்கை இயக்குநர் அவர்களின் பணியாளர் விரோத நடவடிக்கைகள் வருந்தத்தக்கது. இது புதியதாக அமைந்துள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கை என எமது சங்கம் கருதுகிறது.பணியாளர்கள் விரோத நடவடிக்கைகள் பின்வருமாறு—உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத் துறையில் தணிக்கைப் பணியாளர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் நேரடி நியமன உதவி இயக்குநர் விதிகளை ஏற்கனவே தலைமைத் தணிக்கை இயக்குநர் இயற்றிவிட்டார்.இது போதாது என்று தற்போது துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் இரண்டு துறைகளை இணைப்பது, அதன்மூலம் பல பணியிடங்களை குறைப்பது என அதற்காக துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.இதற்கு துறையிலேயே இருக்கும் சிலர் துணைபோகும் துரோகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மறுசீரமைப்பையும், இணைப்பையும் உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு உ.நி.த. ஊழியர் சங்கம் மீண்டும் தலைமைத் தணிக்கை இயக்குநரைக் கண்டித்து தீவிர போராட்டத்தை உடனே தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் மன்ற மாநில மையம் இணைந்து விடுத்துள்ள 12ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனை இந்த சங்க நிர்வாகிகள் மற்றும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் .அவருடன் அமுதா ஐஏஎஸ்ஸூம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதியதாக சித்திக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆக்ஷன் அதிரடி தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். விஜய்யின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.