காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர் ஜூலை 1-வேலூர் மாநகராட்சி, 1வது மண்டலம், காட்பாடி, வார்டு 15ல் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை திடீரென ஆய்வு செய்தார். அத்துடன் வீடுகளில் சேகரிக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்களா? என்பதை முறையாக ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இறை தொண்டு செய்து வரும் இராமசாமி TV மெக்கானிக் அவர்கள் 26.06.2026 வாத நோயால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் 28..06.2026 அன்று இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் அவர் விருப்பப்படி அவரது மனைவி ராணி மற்றும் அவரது மகள் யமுனா அவரது சகோதரர் சுப்பிரமணியன் அவர்கள் முழு சம்மதத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று 12.30 மணியளவில் உடல் தானம் வழங்கப்பட்டது

வேலூர் தாலுகா காவல் ஆய்வாளர் புனிதா டிப்பர் லாரி உரிமையாளர் களிடம் வசூல் வேட்டை!வேலூர், ஜூன் 30-வேலூர் தாலுகா காவல் ஆய்வாளராக புனிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும் டிப்பர் லாரி உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு சக காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கூட்டம் காவல் நிலையத்தில் மாலை வேளையில் ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிலையில் அங்கு வந்த டிப்பர் லாரி உரிமையாளரிடம் லாரி ஒன்றுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் மாமுலாக காவல் நிலையத்திற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் இந்த தொகை ஒரு மாதம் கூட நிறுத்தாமல் செலுத்த வேண்டும் என்றும் அவர் மிரட்டலாக உத்தரவிட்டார். குறிப்பாக அவருடன் செய்தியாளர் போர்வையில் ஒருவர் சுற்றி வருகிறார். அவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த மாமூலை வசூல் செய்தார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த செய்தியாளர் போர்வையில் உள்ள ஒரு டுபாக்கூர் நிருபர் பல்வேறு வழக்குகளில் சிக்கி சின்னா பின்னம் ஆனவர் என்று கூறப்படுகிறது. இவர் காவல் ஆய்வாளர் புனிதா தங்க வீடு பார்த்து கொடுத்துள்ளார்என்று தெரிய வந்துள்ளது. இந்த நபர் தற்போது புனிதா வசம் ஐக்கியமாகி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காதுகளுக்கு தனிப்பிரிவு போலீசாரால் இதுநாள் வரை கொண்டு செல்லப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்கள் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதே டிப்பர் லாரி உரிமையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலூர் தாலுகா காவல் நிலையத்தின் மீது ஒரு கண், ஏன் அனைத்து கண்களையும் கூர்மையாக செலுத்தினால் நன்றாக இருக்கும். குறிப்பாக இந்த விலாங்கு மீன் சிக்குவது உறுதி என்கின்றது நம்பத்தகுந்த வட்டாரம். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் சாமர்த்தியத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக காவல் ஆய்வாளர் புனிதாவுடன் சுற்றித் திரியும் அந்த டுபாக்கூர் நிருபர் மீதும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார் என்பதையும் நாம் போக போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.