Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
வேலூர் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புக்கு களப்பணியாளர்களுக்கு ஆட்சியர் தலைமையில் பயிற்சி!வேலூர், ஜூலை 12-வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் பயிற்சி மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் அளிக்கப்பட்டது. களப்பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி கையடக்க கணினிகளை வழங்கி, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுகளை முழுமையாகவும், துல்லியமாகவும் சேகரித்து அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளை விரைவாகச் சென்றடைய உறுதுணையாக செயல்படுமாறு அறிவுறுத்தி பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் மாநில திட்ட மேலாளர் (பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு) எஸ். ராஜராஜன், மாநில திட்ட மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) ஆர். சௌந்தர் ராஜன், மாநில திட்ட அலுவலர் (சமுதாய மறுவாழ்வு சேவை) எஸ். அரவிந்த் பரத்வாஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச. பாபு, இளநிலை பதிவு அலுவலர் (JRO) இனியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்னர்.
மேட்டுப்பாளையம் – கோவை மெமோ ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க அமைச்சர் எல் முருகனிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்
விடுதலை போராட்ட மாவீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்குதரணிவேந்தன் எம்.பி., – முன்னாள் எம்.எல்.ஏ., ஜோதி மாலை அணிவித்து மரியாதை !செய்யாறு, ஜூலை 12 -தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட ‘மாவீரன் அழகுமுத்துக்கோனின்’ 269வது பிறந்தநாளையொட்டி, வெம்பாக்கத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்தவர் அழகு முத்துக்கோன். இவர் கடந்த ‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி மாவீரராக திகழ்ந்தவர். இவரது 269வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தி.மு.க.,வின் மத்திய ஒன்றியம் சார்பில், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில், இவரது திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரித்து, நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெம்பாக்கம் யாதவ சமூதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், பால்காரர் முனியன், தட்சிணாமூர்த்தி, மணி பிள்ளை, நாகூரான், கமல் ஆகியோர் விமரிசையாக செய்திருந்தனர்.ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்களான ஜே.சி.கே.சீனிவாசன், தினகரன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அண்ணாமலையின்புதிய கட்சிக்கான தினமும் ஒரு நிகழ்ச்சி: செய்யாறில் சரவணன் தலைமையில் நடந்து வருவதாக தகவல் !செய்யாறு, ஜூலை 11 -அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சி தொடர்பாக செய்யாறில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. ‘போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ ஆட்டோக்களில் ஒட்டும் பணியில் தொண்டர்கள் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாமலை கட்சியில் இணையதளம் மூலமாக விரைவாக இணைந்து வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வை செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் – அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சியின் தொண்டருமான சரவணன் தலைமையில், இளம் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ‘மாறுவோம் மாற்றுவோம்’ – இளைஞர்கள் அழிவதற்கு காரணமாக இருந்து வரும் போதைப் பழக்கத்தை ‘தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.செய்யாறு பெரியார் சிலை அருகே நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பஜார் வீதி வரை சென்றது. ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் அணி வகுத்தபடி சென்று, தொண்டர்கள், போதை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். அண்ணாமலையின் புது கட்சி தொடர்பாக தினமும் ஒரு நிகழ்ச்சி சரவணன் ஏற்பாட்டில் நடத்தப்படுவதால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஜூலை 11-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஜூலை மாத (ஆனி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு வெஜ் பிரியாணி சாதம், கத்தரிக்காய் கொஸ்து வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் தொடர்ந்து நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், முன்னாள் அதிமுக கவுன்சிலர் செங்குட்டை குமார் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில், உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் ஒரு சிலர் வீட்டு குடிநீர் இணைப்புகளில் விதிகளுக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சுவதால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தடையின்றி வழங்கிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தியுள்ள வீட்டு உரிமையாளர்கள் மின்மோட்டாரை உடனடியாக துண்டித்து அப்புறப்படுத்திட தெரிவிக்கப்படுகிறது. தவறினால் அவர்களது மின்மோட்டார் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுவதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஏ கே எஸ் காலனிகுடியிருப்போர் நல சங்கத்தினர் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன், சைலன்சர் பொருத்திய வாகனங்கள் மீது காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு, அபராதம் விதிப்பு !வேலூர், ஜூலை 10-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் (சைலன்சர் அதிகமாக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கி ) பொருத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட பிற வாகனங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால் சாலைகளில் விபத்து அபாயம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆட்டோக்களில் வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பல ஆட்டோக்கள் இயங்கும் அசாதாரண நிலை உள்ளது. நகரில் இயக்கப்படும் பல ஆட்டோக்கள் போலீசாரின் ஆட்டோக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்டோக்களின் பக்கம் போலீசார் செல்வதே கிடையாது. குறிப்பாக ஆட்டோக்களில் தான் போதைப் பொருள்கள் கடத்தவும், விபச்சார அழகிகள் அதிக அளவில் பயணிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்களை போக்குவரத்து பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினரோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களோ, வட்டார போக்குவரத்து அலுவலர் கண்டு கொள்வதே இல்லை. ஒரே பதிவு எண்ணில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இயக்கப்படுகின்றன. அதுதான் ஒரு புறம் என்றால் வேலூரில் இருந்து இயக்கப்படும் உள்ளூர் ஆட்டோக்கள் 10 என்றால், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் நகருக்குள் தைரியமாக எவ்வித உரிமமும் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் 100% என்று சொல்லலாம் . ஆந்திர பதிவு எண் கொண்ட ஆட்டோக்கள் தைரியமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தங்க கோயில் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹாயாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டிய போக்குவரத்து பிரிவு போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டோக்களை எங்காவது நிறுத்தி சோதனை செய்வதே கிடையாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சித்தூர் ,திருப்பதி போன்ற ஆந்திர மாநில ஆட்டோக்கள் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேலூரில் வந்து ஏதோ ஒரு பதிவு எண்ணை தங்களது ஆட்டோக்களில் பொருத்திக் கொண்டு இங்கே ஆட்டோக்களை பலர் இயக்கி வருகின்றனர். ரயில் நிலையத்தை எடுத்துக் கொண்டால் காட்பாடியில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை நச்சரித்து அவர்களை தங்களது ஆட்டோக்களில் ஏற்றாமல் விட மறுக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். அத்துடன் இத்தனை கிலோ மீட்டர் இவ்வளவுதான் தொகை வசூலிக்க வேண்டும், கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மறந்து தங்களது வாயில் என்ன வருகிறதோ அந்த தொகையை சொல்லி கறாராக வசூல் செய்து வருகின்றனர் சில ஆட்டோ ஓட்டுநர்கள். வேலூர் செல்வதற்கு ரூபாய் 300, ரூ. 400 என்று கறந்து விடுகின்றனர். இதே போன்று காட்பாடியில் உள்ள விஐடி மாணவர்களை அழைத்துச் செல்ல ரூபாய் 200, ரூ. 300 வசூல் செய்கின்றனர். இப்படி அடாவடி வசூலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். இது ஒரு புறம் என்றால் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. அங்குள்ள ஆட்டோக்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக ஒரு ரகசிய தகவல் வெளிவந்து உலா வந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் என்றால் வேலூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்கள் அடாவடியாக பயணிகள் எந்த ஆட்டோவில் ஏறினாலும் நாங்கள் வரிசையில் நிறுத்தி வைத்திருக்கின்றோம், முதலில் நிற்கும் ஆட்டோவில் தான் நீங்கள் ஏற வேண்டும். உங்களுக்கு விருப்பமான ஆட்டோகளில் ஏறுவதெல்லாம் கிடையாது என்று அருவெறுக்கத்தக்க ஆபாச வார்த்தைகளை சொல்லி ஆட்டோ க்களில் ஏறும் பயணிகளை திட்டுகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டுள்ளது. இதையும் மீறி திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என்று கட்சி வாரியாக புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தங்களை பிரித்து வைத்துக் கொண்டு அதிலும் ஒருபுறம் அட்டகாசம் நடப்பதாக பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதை தட்டி கேட்கவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் காவல்துறையினரிடமோ அல்லது போக்குவரத்து பிரிவு போலீசாரிடமோ சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த விஷயங்கள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வதே கிடையாது தனிப்பிரிவு போலீசார். நன்கு குறட்டை விட்டு தூங்குகின்றனர் என்றே சொல்லலாம். சொல்ல வேண்டியதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளுக்கு கொண்டு செல்வதில்லை. தேவையற்ற ஒன்றுக்கும் உதவாத காரணங்களை மட்டுமே சொல்கின்றனர் என்றும் ஒருபுறம் தகவல் கசிந்து வந்துள்ளது. ஆக மொத்தத்தில் தனிப்பிரிவு போலீசாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூண்டோடு மாற்றி விட்டு வேறு புதிய நபர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து குறிப்பாக ஆட்டோக்களை தினந்தோறும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது இங்கு சோதனை செய்தால் பல ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் சோதனை போதாது. தேவையற்ற ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை, ஆட்டோக்களுக்கும் உரிமை இல்லை. அத்துடன் அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ், புகைச் சான்றிதழ் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு போலி எண்களை பதிவு செய்து கொண்டு இந்த ஆட்டோக்களை இங்கு இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டோக்கள் பகலில் இயக்கப்பட்டு விட்டு இரவு நேரங்களில் ஆங்காங்கே உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். மறுநாள் காலையில் வந்து அந்த ஆட்டோக்களை எடுத்து இயக்குகின்றனர். இது ஒருபுறம் ஓடிக் கொண்டுள்ளது இயங்கிக் கொண்டுள்ளது .இந்த பிரச்சனைக்கு இரும்பு கரம் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், வேலூர் மாவட்ட காவல்துறையும் இணைந்து தினமும் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே இந்த ஆட்டோக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும், முடிவு பிறக்கும். பொது மக்களும், வெளியூர் பயணிகளும், வெளிமாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள். இந்த செயலை துணிந்து மாவட்ட காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலரும் செய்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நகராட்சிசொந்தமான கழிவறையில் அதிக கட்டணத்தை வசூலித்து வரும் ஒப்பந்ததாரரை கண்டித்து மேட்டுப்பாளையம் தாலுகா சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கினர் .
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி பேரூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் அதிகப்படியான மிளிரும் மின்விளக்குகள் ஆகியவைகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட்டன. இதில் பேரூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியவர்கள் வாகனங்களில் இருக்கும் பொருட்களை கைப்பற்றின….
1
2
3
4
…
119