உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கண்டித்து போராட்டம் அறிவிப்பு: உதயசந்திரன் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்!வேலூர்,மே 13-மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வேளையில் இதுநாள் வரை நிதி அமைச்சர் நியமிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தணிக்கை துறைகளில் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவசர கதியில் செயல்படுத்த தீவிரம் காட்டும் தலைமை தணிக்கை இயக்குநர் அவர்களின் பணியாளர் விரோத நடவடிக்கைகள் வருந்தத்தக்கது. இது புதியதாக அமைந்துள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கை என எமது சங்கம் கருதுகிறது.பணியாளர்கள் விரோத நடவடிக்கைகள் பின்வருமாறு—உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத் துறையில் தணிக்கைப் பணியாளர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் நேரடி நியமன உதவி இயக்குநர் விதிகளை ஏற்கனவே தலைமைத் தணிக்கை இயக்குநர் இயற்றிவிட்டார்.இது போதாது என்று தற்போது துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் இரண்டு துறைகளை இணைப்பது, அதன்மூலம் பல பணியிடங்களை குறைப்பது என அதற்காக துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.இதற்கு துறையிலேயே இருக்கும் சிலர் துணைபோகும் துரோகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மறுசீரமைப்பையும், இணைப்பையும் உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு உ.நி.த. ஊழியர் சங்கம் மீண்டும் தலைமைத் தணிக்கை இயக்குநரைக் கண்டித்து தீவிர போராட்டத்தை உடனே தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் மன்ற மாநில மையம் இணைந்து விடுத்துள்ள 12ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனை இந்த சங்க நிர்வாகிகள் மற்றும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் .அவருடன் அமுதா ஐஏஎஸ்ஸூம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதியதாக சித்திக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆக்ஷன் அதிரடி தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். விஜய்யின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனக்காவூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் எடப்பாடி பழனிசாமியின்72வது பிறந்தநாள் விழா!செய்யாறு, மே 13 -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு – மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் – செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, ஞானமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.கோவில் வளாகத்தில் 108 தேங்காய் உடைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனக்காவூர் கிழக்கு – மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சி.துரை, பையூர் சிவராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள், நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காட்பாடி வி டி கே நகர் ரயில்வே கேட் மூடல்: பராமரிப்பு பணிகள் தீவிரம்!வேலூர், மே 13-காட்பாடி வி டி கே நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சமதளக் கடப்பு (Level Crossing), பராமரிப்புப் பணிகள் காரணமாக 12ம் தேதி முழுவதும் மூடப்படுகிறது.ரயில்வே பணியாளர்கள் அந்தப் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரவு பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கிட அனுமதிக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காட்பாடி அடுத்த பொன்னையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர் அதிரடி கைது!வேலூர், மே 13-வேலூர் மாவட்டம், பொன்னை – சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள டி. ஆர்.குப்பம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காட்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களில் போலீசார் தீவிரமாக தேடியதில் குட்கா பொருட்கள் சிக்கின. சிக்கிய குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளர் பாண்டுரங்கன் மீது பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த தகவல் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்பாடியில் தமிழக வெற்றி கழகத்தோடு கைகோர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!வேலூர், மே 12-தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது.காட்பாடி – சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் முன்னிலை வகிதார். தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.