Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: குலுங்கியசெய்யாறு நகரம்!செய்யாறு, ஜூன் 23 -தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாள் விழாவை, த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடியதால் செய்யாறு நகரமே குலுங்கியது.தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு, அவரது 52வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யாறில் மாவட்ட செயலாளர் உதயகுமார் உத்தரவின் பேரில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, அணி அணியாக சேர்ந்து நகரம் முழுவதும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். செய்யாறு பஸ் நிலைய நுழைவு வாயிலில் த.வெ.க.,வின் நிர்வாகி சரவணன் ஏற்பாட்டில் 52 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டின் நுழைவு வாயிலில், மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், செய்யாறு ( தெற்கு ) நகர செயலாளர் பெரோஸ்கான், நகர ( வடக்கு ) துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவை பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்.500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க., பொறுப்பாளர்களான பிரசாந்த், பிரபாகரன், ஏ.சசிகுமார், பூபாலன், ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் செய்யாறு நகர் முழுவதும் முதல்வரின் பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டதால் செய்யாறு நகரமே குலுங்கியது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் கே எம் ஜி கல்லூரிநிறுவனங்களின் தலைவர் கே. எம். ஜி. ராஜேந்திரனுக்கு பிறந்தநாள் விழா: புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் நேரில் வாழ்த்து!வேலூர் , ஜூன் 23-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கே. எம். ஜி .,கல்லூரி நிறுவனங்களின் தலைவர் கே. எம் .ஜி., ராஜேந்திரனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் மற்றும் கைத்தறி காவலன் ரமேஷ் கைத்தறி ஆடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் ரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் தினகரன் மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பொன்னம்பட்டி கார்த்திக் ஜி, பாக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை-அன்னதானம்!வேலூர், ஜூன் 23-தமிழக முதல்வர் தலைவர் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் .வேல்முருகன் தலைமையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ்.கலைமதி மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர், ராமமூர்த்தி விருப்பாட்சிபுரம் பகுதி செயலாளர் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் பிரசாந்த், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் தனசேகர், தோட்டப்பாளையம் பகுதிச் செயலாளர் பாரத் மற்றும் கழக நிர்வாகிகள் ஆனந்த பிரியா, பூஜா, சரளா, லட்சுமி, புஷ்பா, அமலா, யாமினி, ராஜேஷ், சுகுமார், சிவசங்கர், அஜய், அரவிந்த் ,ப்ரேம், பரத் ,செல்வம், ஆனந்த், சாரதி, வினோத், அன்பு, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேருந்தில் குழந்தையின் கையில் இருந்த தங்கக் காப்பை திருடிய பலே பெண்மணி கைது!விழுப்புரம், ஜூன் 23-பஸ் ஏறும் போது 2 வயது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த சின்னகோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஜெயப்பிரியா (26). இவர் நேற்றுமுன்தினம் நண்பகல் 12:00 மணியளவில் செஞ்சியில் இருந்து கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்கு தனது 2 வயது குழந்தையுடன் தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது ஜெயப்பிரியாவின் பின்னால் இருந்த புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மேரி (56) குழந்தையின் கையில் இருந்த 1 சவரன் தங்கக் காப்பை கழற்றியுள்ளார். இதைப் பார்த்த ஜெயப்பிரியா கூச்சல் போட்டதும் அருகில் இருந்தவர்கள் மேரியை பிடித்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரியை கைது செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் விழிப்புணர்வு பேரணி செங்குன்றம் வண்டி மேடு பகுதியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை சகோதரர் மாலிக் பாஷா மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் அதனை தொடர்ந்து சிறப்புரை சகோதரர் E.முகமது (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர்)கண்டன உரையாற்றினார்ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என திரளாக கலந்து கொண்டனர்
காட்பாடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்!வேலூர், ஜூன் 22-காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பெருமாள், செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் மாவட்ட தலைவர் குமரவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் அழகுசுந்தரமும், மாநில பொருளாளர் பிச்சைகண்ணு சிறப்புறையும் ஆற்றினர்.வேலூர் மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் கண்ணபிரான், பொருளாளர் குமரவேல், அணைக்கட்டு பிரிவு லோகநாதன், ராஜேந்திரன், சாமிநாதன், காட்பாடி பகுதி மார்கண்டேயன், ஜார்ஜ், லோகநாதன், ஜெயசங்கர், கஜேந்திரன், சிட்டிபாபு, விநாயகம், சேன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமீப காலங்களில் உயிரிழந்துள்ள சாலை பணியாளர்களுக்கு இந்த செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.புதியதாக தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் தவெக ஆட்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறது. நெடுஞ்சாலை துறையில் சாலைப் பணியாளர்களாக பணியாற்றி உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தர ஊதியம் ரூ.1900 – ஆக உயர்த்தி அன்ஸ் கில்டு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.
செய்யாறில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்முப்பெரும் விழா கோலாகலம்!செய்யாறு, ஜூன் 22 -செய்யாறு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் மணி, பொருளாளர்சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதியோர் இல்லங்களை நடத்தி முதியோர்களை கடைசி காலங்களில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் ஆர்.ஸ்ரீதருக்கும், கண் தானத்தின் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் எம்.சண்முகம் ஆகிய இருவருரையும் கெளரவித்தல், சங்கத்தின் 8ம் ஆண்டு வட்ட பேரவை விழா, 70 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஓய்வூதியர்களை கெளரவித்தல் என முப்பெரும் விழா நடந்தது.கூட்டத்தில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டு வர புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழைய ஊதிய திட்டத்தை புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். வட்டக் கிளை இணைச் செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.
பெரியபாளையம் அருகே அம்மோனியா கசிவில் 7உயிரிழப்பு
நீட் தேர்வு மாணவர்கள் நுழைவு செக்கிங் தொடங்கியது..!*
எஸ்.பி.பெயரை வைத்து பவர் காட்டி பொதுமக்களை அலைக்கழிக்கும் தனிப்பிரிவு எஸ்.ஐ – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட எஸ்.பி.சிபின்.
1
…
12
13
14
…
119