செய்யாறில் சாலை விரிவாக்கப் பணி மீண்டும் தொடங்கிவிருவிறுப்பாக நடந்து வருகிறது:அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ள்ளனர் !செய்யாறு, ஆக. 12 -ஆற்காடு – திண்டிவனம் இடையே சாலை விரிவாக்கப் பணியானது செய்யாறில் மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சாலை பணிகளை பார்வையிட்டு வேகப்படுத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு நகரம். இங்கு ஆண்டிற்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், செய்யாறு நகரத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இங்கு அரங்கேறி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் செய்யாறில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டமான ஆற்காட்டில் இருந்து செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனம் வரை உள்ள நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணி மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் கிராமத்திலிருந்து செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை விரிவாக்கப் பணிகளை ‘சுகன்யா கன்ஸ்ட்ரக்ஷ்ன் மதுரையைச்’ சேர்ந்த நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் துரிதப்படுத்தி உள்ளனர். இந்த சாலைப் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளை செய்யாறு நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாலைப் பணிகளை தரமாகவும், பருவ மழைக்குள் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
Leave a Reply