வேலூர் மாநகர காங்கிரஸ் நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்: மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக எத்திராஜ் தகவல்!வேலூர், ஆக.11-வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.எஸ். எத்திராஜ், இது குறித்து கட்சியின் மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநகர காங்கிரஸ் தலைவர் வாஹித் பாஷாவின் கட்சி செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, மாநகர அளவிலான கட்சி கூட்டங்களில் மாநகரத்தின் பல்வேறு அணிகள், வார்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உரிய முறையில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு, மாணவரணி, இளைஞர் காங்கிரஸ், மகளிரணி, ஓபிசி அணி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இரவு நேரங்களில் அதாவது நள்ளிரவுக்கும் மேல் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பல சமூக விரோதிகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது. பழைய மாவட்ட தலைவரையே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் உண்மையான கட்சி தொண்டர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே கொண்டு மாநகர அளவிலான கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கட்சி நிதி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பெறப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் தொடர்பாகவும் எத்திராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சிக்காக பெறப்பட்ட நிதிகளுக்கு முறையான கணக்கு மற்றும் வெளிப்படையான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், காந்தி சாலையில் கடைகள் தொடர்பான வசூல் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறும் வரவு–செலவு நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.திருவாரூரில் காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளை முன்வைத்துள்ள பி.எஸ்.எஸ். எத்திராஜ், சம்பந்தப்பட்ட மாநகர நிர்வாகம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகர காங்கிரஸ் தலைவர் வாகித் பாஷா மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் விளக்கம் கிடைத்தால், அதையும் வெளியிடத் தயாராக இருப்பதாக எத்திராஜ் தெரிவித்துள்ளார். இந்த புகார் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply