
மத்திய அமைச்சரை சந்தித்து வேலூர் விமான நிலையத்தை விரைவில் திறக்க கோரிக்கை: எல்.கே. சுதீஷ் எம்.பி. வலியுறுத்தல்வேலூர், ஆக. 8-தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ், எம்.பி., மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, வேலூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.அவர் அளித்த மனுவில், RCS-UDAN-II திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டதாகவும், தற்போது DGCA ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து, விமான நிலைய உரிமம் வழங்கும் இறுதிக்கட்ட நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது BCAS-இன் இறுதி பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அந்த அனுமதி கிடைத்தவுடன் DGCA உரிமம் வழங்கி, விமான நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 9 ஆண்டுகளாக விமானப் போக்குவரத்து வசதிக்காக காத்திருப்பதாகவும், விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் மருத்துவ சுற்றுலா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவதுடன், வடதமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, BCAS மற்றும் DGCA அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இறுதி பாதுகாப்பு அனுமதி மற்றும் விமான நிலைய உரிமத்தை விரைந்து வழங்கி, UDAN திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தில் விமான சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் எல்.கே. சுதீஷ் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.இந்த முயற்சியின் மூலம் வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து, வடதமிழகத்தின் விமானப் போக்குவரத்து இணைப்பு வலுப்பெறும் என்ற நம்பிக்கையை தேமுதிக தெரிவித்துள்ளது.










Leave a Reply