கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்உலக மக்கள் தொகை தின விழா!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில்,’உலக மக்கள் தொகைதினம்’ (ஜூலை.11- ஆம் தேதி ) ஜூலை.24-அன்று கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்குகல்லூரி முதல்வர். பி.பிரபுகாந்தன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்தவேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலக துணை இயக்குநர்.மரு.கோ.மணிமேகலை,வேலூர் மாவட்ட விரிவாக்க கல்வியியலாளர்.சாதனா,வேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலக வட்டார சுகாதார புள்ளியியலாளர் ஜே.ரகுநாத், வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார புள்ளியியலாளர்எஸ். நவச்சக்கரவர்த்தி,கே.வி.குப்பம் வட்டாரசுகாதார மேற்பார்வையாளர்,கே.வி.குப்பம் சுகாதார ஆய்வாளர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்அரசு அலுவலர்கள்,சமூக நல மையம் (சிஎச்சி), வடுகந்தாங்கல் ஆகியோர்கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்,” குழந்தைகளுக்கு இடையே சரியான இடைவெளி இருக்கும்போதுதான் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்”- என்கிற கருத்தை வலியுறுத்தி முழக்கமிட்டனர்!அதன் கருப்பொருள்,”தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும்,திட்டமிடப்படாத கர்ப்பங்களைதடுப்பதற்காகவும்,கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம்”- என்பதாகும்.மேலும்,”ஒவ்வொரு வட்டாரத்திலும், உயர் வரிசை பிறப்பினை குறைத்தல்,பெண் திருமண வயதை உயர்த்துதல், பெண் கல்வியை ஊக்குவித்தல்,இரு குழந்தைகளுக்குஇடையிலான பிறப்பு இடைவெளி குறைந்தது மூன்று ஆண்டுகள் என்பதை உறுதி செய்தல் மற்றும்பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சம்பந்தமாக தகுந்த பணியாளர்களைக் கொண்டுவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”- என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும், நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில்வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டது.வேலூர், கே.வி.குப்பம்,வடுகந்தாங்கல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில்மரக்கன்றுகள் நடப்பட்டது.