தவிர மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது பாலியல் வழக்கு!ராணிப்பேட்டை, ஜூலை 26-தமிழக வெற்றி கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் மோகன், மற்றும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஜான் பிரிட்டோ என்பவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பெண் பாலியல் புகார் தொடர்பாக ஆற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்டுரோடு, மாசாபேட்டை, அண்ணா நகர், பகுதியைச் சேர்ந்தவர் பவ்யலட்சுமி. இவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் தனக்கு கட்சியில் பதவி வழங்குவதாக தன்னை ஆசைக்கு இறையாக்கி ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாகவும், மேலும் தன்னை ஆசைக்கிணங்க வற்புறுத்தி மீண்டும் மீண்டும் தொல்லைக் கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக பெண் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.சென்னை தலைமை டிஜிபி காவல் நிலையம் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், போன்ற அலுவலகங்களில் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில் அப்பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஆற்காடு நகர காவல் நிலையத்திலும் அந்த பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ராணிப்பேட்டை தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மற்றும் அவருடன் செய்தியாளர் ஜான் பிரிட்டோ ஆகிய இருவர் மீதும் ஆற்காடு நகர காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.புகார் எண் Cr.No.266/2026,U/s 75,76,77,351(2)BNS on23.07.2026 பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பு :- விஜய் மோகன் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் இரண்டாவது நபராக வழக்கு பதிவு செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டம் நியூஸ் 7 செய்தியாளர் ஜான் பிரிட்டோ என்பதாகும்.