தவெக சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அப்புறப்படுத்தப்படுமா?வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஜனநாயகன் திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்த பேனர்கள் வைத்ததால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக சாலை வழியாக தரை மார்க்கத்தில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் சரிவர கண்களுக்கு தெரியவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நிலவி வருகிறது.காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சுதாகர் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய திரைப்படம் வெளியானால் அந்த திரையரங்கு எங்குள்ளதோ அந்த பகுதியில் பேனர்கள் வைத்து ரசிகர்கள் அழகு பார்ப்பது கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. ஆனால் தவெக கண்ட இடத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இப்படி பேனர்கள் வைத்து அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருப்பது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சித்தூர் பேருந்து நிலையம் மிகவும் குறுகலான பகுதி. குறிப்பாக அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் இதுபோன்ற பேனர்களை உடனடியாக வேலூர் மாநகராட்சி 1வது மண்டல நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதாவது வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் முறையாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ரூபாய் 300 செலுத்தி அதற்குண்டான சான்றிதழ்களையும் பேனரில் அச்சடித்து பின்னர் பேனர்களை நிறுவ வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த விதிகளை காற்றிலே பிறக்க விட்டு விட்டு தங்கள் விருப்பம் போல் கண்ட கண்ட இடங்களில் பேனர்களை வைத்து நகரை அசுத்தப்படுத்தி வருகின்றது தவெக. தவெக மட்டுமல்ல பல அரசியல் கட்சிகளும் இதே நிலையை பின்பற்றி வருவது நகருக்கு ஆரோக்கியமானது அல்ல. குறிப்பாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த பேனர்கள் அமைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேனர்கள் சரிந்து சாலையில் நடந்து செல்வோர் ,வாகனங்களில் செல்வோர் மீது விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருவதை நாம் கடந்த காலங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது வந்துள்ள தவெகவும் அதே நிலையை பின்பற்றி தொடர்ந்து பேனர்கள் வைத்து வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சித்தூர் பேருந்து நிலையத்தில் எந்த கட்சியோ அல்லது பல நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் நடத்தும் எந்தவித கூட்டமும், எந்த விழாக்களோ நடத்துவதற்கு இந்த இடத்தை இனிவரும் காலங்களில் காவல்துறை வழங்கக்கூடாது என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவல்துறை வேறு ஏதாவது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தை தேர்வு செய்து கூட்டங்கள் மற்றும் விழாக்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக மாறி உள்ளது. சித்தூர் பேருந்து நிலையம் ஒரு குறுகலான பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்கள சொல்லொனா துயரத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற உறுப்பினர் என்பவர் முன் உதாரணமாக திகழ வேண்டும். அதை விடுத்து இவ்வாறு சாதாரண மனிதர்களைப் போல நடந்து கொள்வது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரை தூய்மையாகவும், சுத்தமாகவும் எவ்வித விபத்துகளும் ஏற்படாமல் வைத்து பாதுகாக்க வேண்டியது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தலையாயக் கடமையாகும். அவரே இது போன்று பேனர்களை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் எந்தவித அரசியல் கட்சிளும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்களின் நன்மையை கருதி அரசியல் கட்சிகள் இதனை பின்பற்றி நடந்து கொள்வார்களா? அல்லது வழக்கம்போல் பேனர்களை வைத்து நகரை நாறடிப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.