
புதியதாக பொறுப்பேற்ற குடியாத்தம் கோட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த புதிய நீதி கட்சி நிர்வாகி எஸ்.ரமேஷ்!வேலூர்,ஜூலை 22-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோட்டாட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமாரை, புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளரும், கைத்தறி காவலருமான எஸ். ரமேஷ் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, மனமார்ந்த தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அப்போது, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, குடியாத்தம் கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றி, மக்கள் நலனுக்கான சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என தனது வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் தெரிவித்தார்.புதிய பொறுப்பை ஏற்றுள்ள கோட்டாட்சியர் செந்தில்குமாருக்கு பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply