
மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 9ம் தேதிபொது ஏலம் அறிவிப்பு!வேலூர், ஜூன் 3-வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன்படியும், மறுமதிப்பீடு செய்யப்பட்ட மதுவிலக்கு வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுவிலக்கு வழக்கு இருசக்கர வாகனங்கள் 63, மூன்று சக்கர வாகனங்கள் என -மொத்தம்-65 மற்றும் கஞ்சா வழக்குகளில் இருசக்கர வாகனங்கள் -07, –02 02, மொத்தம் -09 (65+09) ஆகிய வாகனங்கள் வரும் 09.06.2026 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 09.00 மணி முதல் வேலூர் மாவட்ட ஆயுதப்படை நேதாஜி ஸ்டேடியம் மைதானத்தில், வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100/- நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். அதேபோல் கஞ்சா வழக்கு லாரியை ஏலம் எடுக்க வருவோர் ரூ.5,000/- முன்பணம் வைப்பு தொகை செலுத்தப்பட வேண்டும். ஏலத்தொகையுடன் இரு சக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி குறிப்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.










Leave a Reply