
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கல்!வேலூர், ஜூன் 2-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் சதாநந்தம், கடந்த மே 29 அன்று விளாப்பாக்கம் கிராமம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கடந்த மே 31 அன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இந்நிலையில் அவரது நுரையீரல்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனையிலும் , மற்றொரு சிறுநீரகம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரது மனைவி பெயர் அன்பரசு . அவரது தந்தை சதானந்தன் ஒரு தச்சர் மற்றும் அவரது தாய் காஞ்சனா, இவர்களுக்கு நான்கு வயது மகன் ராக்கி மற்றும் இரண்டு வயது மகள் ராணியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.










Leave a Reply