50 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா!வேலூர், மே 31-கடந்த தேர்தலில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினராக தவெக கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுதாகர் வெற்றி பெற்றார். இந்நிலையில் காட்பாடி சட்டமன்ற அலுவலகம் புனரமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டிய நிலையில் பயன் பாடின்றி கிடந்தது. இந்த அலுவலகத்தை சீரமைப்பு செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் எம் எல் ஏக்கள் காட்பாடி டாக்டர் சுதாகர், வேலூர் ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் சிந்து, கே. வி. குப்பம் தென்றல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர்கள் மேற்கு வேல்முருகன், கிழக்கு நவீன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைச்சர் காந்திராஜ் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு மற்றும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
Leave a Reply