சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக சார்பில் கள ஆய்வு!வேலூர், மே 22-நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் களப்பணிகளின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வேலூர் தெற்கு மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு தெற்கு, ,வடக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகளுடனான கள ஆய்வு கூட்டம் வேலூரில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் மற்றும் கழக சட்டத்துறை இணை செயலாளர் I.பரந்தாமன் தலைமையிலும், வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ஒருங்கிணைப்பிலும் வேலூரில் நடைபெற்றது.
Leave a Reply