செய்யாறில் வி.தி.லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில்போதை ஒழிப்பு விழிப்புணர்வுஉறுதிமொழி ஏற்பு!செய்யாறு, ஆக.1-செய்யாறில் வி. தி. லீடர்ஸ் கட்சி சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.செய்யாறு அடுத்த திருவத்திபுரம் எல்லையான செய்யாற்றங் கரையில் தொடங்கிய இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி, பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு வி. தி. லீடர்ஸ் கட்சியின் பொறுப்பாளரான வெங்கட்ராயன் பேட்டையைச் சேர்ந்த ஆ.சரவணன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். சக்தி நாராயணன், யுவராஜ், சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு அடுத்த வளர்புரம் கிராமத்தில் இயங்கி வரும் இந்தோ அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.போதையினால் ஏற்படும் அழிவுகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அரசு, தனியார் பஸ்களில் வந்த பயணிகளுக்கு போதை பொருள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். போதை தடுப்பு குறித்த இந்த விழிப்புணர்வு பேரணி செய்யாறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இறுதியாக செய்யாறு பெரியார் சிலை அருகே கல்லூரி மாணவர்கள் வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதை தடுப்பு தடுப்பு உறுதி மொழியை ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களான வெங்கடேசன், ரமேஷ், அன்பழகன், கோவிந்தராஜ், கார்த்தி, ஆஷாக், பரத், சுரேஷ், ஜெயராஜ், பூபதி மற்றும் தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.