காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் முத்தமிழ் விழா கோலாகல கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 24-வேலூர் மாவட்டம்,காட்பாடி காந்தி நகரிலுள்ளஆக்சிலியம் மகளிர் கல்லூரியில்,முத்தமிழ் விழாவின் நிறைவு நாள் விழா நடைபெற்றது.அதில்,மாணவிகளுக்கிடையேஉரியடி, கயிறு இழுத்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி, பல்லாங்குழி,பம்பரம், கோணிப்பை ஓட்டம், குடுவையில் நீர் நிரப்புதல்போன்ற பலவகையான தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கோலாட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், கும்மியடித்தல் போன்ற பாரம்பரிய நடன போட்டிகளும் நடத்தப்பட்டது.மேலும், தமிழ் பாரம்பரியஉடையணியவும், உணவு உண்ணவும் மாணவிகளுக்குவலியுறுத்தப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயல் முனைவர். ஆ.மேரி ஜோஸ்பின் ராணி கருத்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர். முனைவர். அ.ஆரோக்கிய ஜெய்சீலி வாழ்த்துரை வழங்கினார்.துணை முதல்வர்.முனைவர் அ.அமலா வளர்மதி, துணை முதல்வர்.முனைவர்.க.அபிபியூலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ் துறை தலைவர். முனைவர். கோ.செந்தில் செல்வி, தமிழ் துறை மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மேலும், அக்கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும்கலந்து கொண்டு நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.’அலைப்பேசியை விடுப்போம் பாரம்பரியத்தை கையில் எடுப்போம்!’- என்ற வாசக தோரணத்துடன் விழாக்களம் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.