சர்வதேச ரெட்கிராஸ் தினம்: மகளிருக்கான இலவச தையற் பயிற்சி வகுப்புகளை வேலூர் கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் தொடங்கி வைப்பு!வேலூர், மே 10-இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளை சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த மனித நேய பண்பாளர் ஜீன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிளை தலைவர் அ.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது…ரெட்கிராஸ் அமைப்பு உலகளாவிய அமைப்பு மனித நேய பண்பாளர் ஜூன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாள், சர்வதேச ரெட் கிராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் சார்பில் இலவச தையற் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைப்பத்தில் நான் மகிழ்சியடைகின்றேன். காட்பாடி ரெட்கிராஸ் கிளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட செயல்பாடுகள் செய்து வருவது பாராட்டத்தக்கது. தையற் பயிற்சி வகுப்பிலும் மேலும் கணினி பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து பயன்பெற வேண்டும். சர்வ தேச ரெட்கிராஸ் தினத்தில் மனித நேயத்துடன் பணிகள் செய்வதை பாராட்டுகின்றேன் என்றார். இந்த விழா விருதம்பட்டு செசயர் ஹோம் வளாகத்தில் உள்ள பாத் பைன்டர் அறக்கட்டளை அலுவலகத்தில் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலச்சந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.சுதாகர், சேவகன் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, டி.லிவிங்ஸ்டன் மோசஸ், எ.ஆனந்தகுமார், என்.ஞானவேல், பி.என்.ராமச்சந்திரன், எஸ்.அருள்சுடர், வி.ஆறுமுகம், ஆகியோர் பங்கேற்றனர்.இலவச தையற் பயிற்சி மையத்தினை கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் திறந்து வைத்தார். வட்டாட்சியர் ஆர்.பாலசந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.
Leave a Reply